About Me

2020/11/05

வாராய் - வாராய்

 

1. வாராய் - வாராய்

---------------------------------

வாராய் மழையே  மேகம் பிழிந்தூற்றட்டும்/

வானவில் பின்னிடும்  வண்ணக் கலவையும்/

மண்வாசச் சுவையினில் கலந்திடும் தென்றலும்/

என் ரசிப்புக்குள் வீழ்ந்திடவே வாராய்/


ஜன்ஸி கபூர் - 5.11.2020

-------------------------------------------------------------------------------------- 

2. கனவின் வழியே பயணம்
--------------------------------------------
அன்பும் அறிவும் ஆற்றலும்/
சிந்தையைச் செதுக்கிடும் போதெல்லாம்/
நிசத்தின் தேடலாகத் தொடர்கின்றதே/
கனவின் வழியே பயணம்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020

---------------------------------------------------------------------------------------- 


3. 
மூக்கும் நுகருதே வண்டின் மணம்/
நோக்கும் பார்வைக்குள் வெறுப்பும் தெரியுதே/
விரும்பா நட்பை முகமது காட்டும்/

*****
தேடி வரும் நட்பின் அணைப்பால்/
ஓடு விடுமே முரண்களும் பேதங்களும்/

ஜன்ஸி கபூர் - 18.11.2020

---------------------------------------------------------------------------------- 

4. பச்சோந்திகள்
-----------------------
 பொய்களைப் பேசியே பொருந்திடுவார் வாழ்வுக்குள்/
மெய்க்குள் வேடமிட்டு மெச்சுவார் தம்மையே/
---------------------------------------------------
சுயநலம் கொண்டு சுடுகின்றாய் அனலாக/
பயமற்றே தரிக்கின்றாய் பல வேடங்களைத்தானே/

ஜன்ஸி கபூர்
------------------------------------------------------------------------------------------

5.செம்புலப் பெயல்நீர் போல
-------------------------------------------- 
தழுவினாய் அழகான அன்பினால்/
விழுந்தேனடி நிதமும் பார்வையினில்/  
இருப்பிடம் வேறானாலும் காதல்/
இணைக்குமே நம்மை உறவுக்குள்/

ஜன்ஸி கபூர் - 24.11.2020
----------------------------------------------------------------------------------

6. ****************************
ஆதியும் அந்தமும்
இதயம்
*****************************
இதயம் தேடுகின்றதே தினமும் உன்னை/
இருவிழிகளிலும் பூக்கின்றதே உன்றன் கனவுகள்/
இணைந்திடத் துடிக்கின்றதே அன்பின் மனமும்/
இன்பச் சிறகடிப்பில் என் இதயம்/

ஜன்ஸி கபூர் -26.11.2020
--------------------------------------------------------------------------------------

7.
கீழிறங்கும் மேகம்/
வளைந்து அசைந்து செல்கின்றது/
துணி நாடா/
 
ஜன்ஸி கபூர்- 26.11.2020
-------------------------------------------------- 




 1. தொலைபேசிக்குள் தொலைந்து போனதே நமது வாழ்க்கை/

2. பொழுதுகளை விழுங்கும் இளைஞர்களின் இணைய மோகம்/
  
ஜன்ஸி கபூர் - 30.11.2020
----------------------------------------------------------------------------------------------


 

பாய்ந்தது வெள்ளம்
பாரிய சேதம் /
காய்ந்தது உதரம்
காட்டுது பஞ்சம் /
நிறைந்த வெள்ளத்தால்
நிம்மதி கரைந்தது /
மறைந்த இன்பத்தால்
மனமும் பதைத்தது /

ஒஸ்லி கபூர்
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!