About Me

2020/11/05

வறட்டு கௌரவம்



சோபனங்களைச் சுமந்து பயணிக்கின்ற வாழ்வு/

சோர்ந்து வீழ்கின்றதே வறட்டுக் கௌரவத்தில்/

நிசங்களின் துளைகளை நிரப்புகின்றன மாயைகள்/

நிம்மதி கலைக்கையில் நிதானமிழக்கின்றது மனது/


தனக்கான வாழ்வினை  பிறர் தரிப்பிடங்களாக்கி/

தகுதியில்லாக் கௌரவத்தினுள் தனையும் அடக்கி/

தவிப்புக்களைச் சுமந்து தத்தளிப்போரின் உயிர்ப்பு/

தள்ளாடுதே தினமும் அவலச் சுமைக்குள்/


அடுத்தவர்க்கே அஞ்சி தன்னையே ஒளிப்போர்/

அவனிக்குள் அலைகின்ற சுயமற்ற மாந்தரே/ 


ஜன்ஸி கபூர் - 05.11.2020


 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!