About Me

2012/09/07

Ninaithu Ninaithu



உண்மைக்காதலின் உடைவும், பிரிவும் தாங்க முடியாத வலி....
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் நம் மனசுக்குள் ஆழ ஊடுறுவி, நாம் அனுபவித்ததைப் போன்ற வலியை ஏற்படுத்துகின்றது...

நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்......உன் ஞாபகங்கள் என்னுள் ஒவ்வொரு கணங்களிலும் உயிரூட்டப்படுகின்றனவே!
நீயே என்தன் நிஜமாகி, மனசுக்குள் மகிழ்வுகளைத் தூவும் நேரம் காலனின் அழைப்பு உனக்கேனோ.......அன்பே!

நம் கனவுகள் கூட இன்னும் முதிர்ச்சியடையுமுன்னர், தீயிட்ட காகிதமாய் நீயும் என்னை விட்டு கருகியதேனோ.......

ஒவ்வொரு பொழுதிலும் மின்னலாய்த் தோன்றும் நீ, என் அருகாமையில் வீழ்ந்து, உன் விரல்களால் நெருடி என்னை உஷ்ணப்படுத்தும் அந்தக் கணங்கள் என் கண்ணுள் வீழுமோடி என்னுயிரே!

நாமர்ந்த மர நிழல்கள் கூட உன்னிருப்பைக் கேட்டுத் துடிக்குமே......உன் கொலுசொலிகளின் சப்தத்தில் விழித்துக் கொள்ளும் என் இருப்பிடம் கூட உன்னைக் கேட்டு என்னைக் கொல்லுமே.....நான் என்ன சொல்வேன் உயிரே!

நீ பேசிய வார்த்தைகள் என்னுள் ஆழமாகப் பதிந்திருக்க, உயிரோடு ஒன்றிணைந்த உன்னை மறப்பது சாத்தியமோ......அன்பே , அழக்கூட எனக்குள் சக்தியில்லையடீ!

இனிமையான காதல் பகிர்ந்து சென்ற இந்தப் பிரிவும்,  நாயகன் நெஞ்சில் வடியும் சோகங்களும் என் கண்களையும் நீராட்ட, இப்பாடலில் மெய்மறந்து துடிக்கின்றேன்...........

அவள் மரணித்தாலும் கூட, மீண்டும் தன்னைத் தேடி வருவாளென்ற அவன் நம்பிக்கையிலெழும் அந்தக் காதலின் ஆழம் மெய்சிலிர்க்க வைக்கின்றது..

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, மனதைத் தொட்டுச் செல்லும் பாடலிது!


நினைத்து நினைத்து பெண்குரல் ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!