About Me

2014/08/16

புரிந்து கொள்


கொற்றனே !
உன்னில் தடுமாற்றம் 
ஏன் என்னுள் மாற்றம்!

இற்றைவரைக்கும்
நீயென்னை  
வார்த்தைகளால் இம்சித்தும்
என்னுணர்வில் மாற்றமில்லை 

அன்பென்றும்
நிறமாறா பூக்கள் - இவ்
வகிலத்தில் 
நீயும்
நானும் விதிவிலக்கா சொல்!

புரிந்து கொண்டால்
இன்னும்
பரிவு வளரும் நமக்குள்!

Jancy Caffoor

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!