விழுந்தன மயிலிறகுகள் - உன்
வார்த்தைகளில் பிசையப்பட்டு
வசியமானேன் உன்னுள்!
மொழியிழந்த நானோ - உன்னுள்
இலக்கணம் தேடுகின்றேன்
நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!
இரவின் ரகஸியத்தில்
நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்
இப்பொழுதெல்லாம்
வேவு பார்க்கின்றன நம் கனவை!
இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோ
இப்போதடிக்கடி
இடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கி
வீம்பாய்!
உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்
உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......
உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!
சொற்களை அழகாய் நீவி - என்னுள்
நீ கவியாய் சிறகடிக்கையில்..............
என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னை
அணைத்துக் கொள்கின்றன அழகாய்!
காற்றிலே யுதிர்க்கும்
உன் குரல் ஸ்பரிசங்களால்.........
குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்
வீழ்கின்றன சரனடைந்தே!
காதலா.........
அன்பா............
நட்பா...........
ஏதோவொன்று
நம்மைக் கடந்து செல்கையில் மட்டும்
முறைக்கின்றாய் நிமிடங்களோடு
பிரிவின் வலிக்கஞ்சி!
Jancy Caffoor

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!