About Me

2014/08/03

சுயநலம்



சாலையோரம்

அருகே தலை நிமிர்ந்து நிற்கும் மரங்களின் அழகான மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அதன் நறுமணமோ நாசிக்குள் உட்புகுந்து மனதை வருடிக் கொண்டிருக்கின்றது. பூக்களை மிதித்துதான் அவ்வழியைக் கடக்க வேண்டும். சுதந்திரமாக உதிர்ந்து கிடக்கும் இயற்கையின் கொடையை! மிருதுவான மேனியுடன் சாலையோரம் வீழ்ந்து கிடக்கும் அம் மென்னிதழ்களை நசுக்க யாருக்குத்தான் மனம் வரும்.

இருந்தும் நம் வழிப்பாதையின் தடைக் கற்கள் அவை! கடந்துதான் ஆகவேண்டும்.மிதிக்கின்றேன். இதமான மென்மையுடன். மனசு வலிக்கின்றது. நாளை அவை உலர்ந்து சருகுகளாகி விடலாம். அல்லது அழகு அழிந்து காற்றில் வேறெங்காவது பறந்தும் போகலாம்! நம் சுயநலம். இயற்கையை ஏதோ வகையில் இம்சித்துக் கொண்டே இருக்கின்றது.

-  Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!