About Me

2014/08/03

ஏனோ



இப் பிரபஞ்சத்தில்
நானும்
நீயும்
இரு உருக்கள்
இறுகிய பாறைகளல்ல
அழகிய அன்பை யுடைக்க!

நம்
விழிகளில் விம்பம்
விழவேயில்லை யின்னும்
இருந்தும்...
அகக் கண்ணில் நம் நகர்வுகள்
அடிக்கடி வீழ்த்தப்பட்டு
வீம்பாய்
முறைக்கின்றன செல்லச் சண்டைகளாய்!

அடுத்தவர் முறைப்பில்- நம்
விருப்புக்கள் இடமாறிச் செல்லும்போதெல்லாம்
சிறகடிக்கும் அன்பும்
உயிர்க்கின்றன இதமாய்!

என்னை யுன்னிடம் நிருபிக்க
அன்பு மாத்திரமே யுண்டு!

பத்திரப்படுத்து அதனை - நாளை
என் ஞாபகங்களாவது
பொய்க்கா மலிருக்க!

காலத்தின் சிதைவில்
காத்திரமான என் அன்பும் உன்னில்
கறைபட்டுப் போனதோ!
கலங்கி நிற்கின்றேன்


- Jancy Caffoor-
 13.08.2014


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!