About Me

2014/12/29

வானவில்



அடர்ந்த கானகமாய்
படர்ந்திருந்த வானம்.....
இன்று மெலிதாக பனி தூவி ஔி சிந்திச் சிரிக்கின்றது
அழகாய்!
கார்மேகம் கண்ட விழிகள்
சூரிய இறகுகளால் இன்று ஸ்பரிசிக்கப்படும்போது
மெழுகாய் உருகிய மனம் கூட சற்றுத் தரித்து
களிப்போடு.........
சில நொடிகளாவது ஔி பரப்பிய அந்த வானுக்கு
சபாஷ்!
ரேகைகள் ...........
வர்ணமிழந்தாலும் அழகுதான் - அதன்
சுதந்திர பூமியில்!
-------------------------------------------------------------------
பிரிவுகள்..........
உறவுகளை அறுத்துவிடும் ஆயுதமல்ல
அந்த வெறுமையில்...
இதயவலியின் ஓசையுடன்
உண்மை அன்பை வௌிப்படுத்தும்
அளவுகோல்!
----------------------------------------------------------------------

போராட்ட வாழ்க்கை தினமும்
வேரற்ற மரமாய் நானும்.....
----------------------------------------------------------------------
உண்மைகள் என்றோ ஒரு நாள் வௌிச்சத்திற்கு வரும்போது
பொய் சொன்ன உதடுகள் மௌனித்து விடுகின்றன.....



- Ms. Jancy Caffoor -
          29.12.2014

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!