வீடு என்பது வெறும் சிமெந்தும் கற்களும் குவித்துக் கட்டப்பட்ட உயிரற்ற இடமல்ல..உயிர் ஜீவன்கள் நடமாடும் இல்லம். அதிலும் வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இருந்துவிட்டால் அமைதி, வெறுமையங்கு காணமல் போய்விடும். நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கே அங்கு நேரமில்லை.. அவர்களின் செல்லக் குழப்படிகள் நம்மை சில நேரம் ஆத்திரமூட்டினாலும்கூட, நமது கோபத்தை மறந்தவர்களாக அப்பிஞ்சுகள் நம்மைத் தேடி வந்து கொஞ்சு மழலையில் தமது அன்பை வௌிப்படுத்தும்போது நாமும் எல்லாவற்றையும் மறந்துதான் போகின்றோம்.
சின்ன நிலாக்கள்
அழகான அன்பின் ஸ்பரிசம்....
அனுபவிக்கும்போது ஆயிரம் விண்மீன்கள்
சிறகடித்திறங்கும் நம் மில்லத்தில் ஔி கொடுக்க!
- Jancy Caffoor-
30.12.2014

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!