About Me

2020/12/09

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன்




 
காவியத் தாய் கண்டெடுத்த கண்ணதாசன்/
கவியுலகம் சூடிக் கொண்ட மணிமகுடமே/
கரையுமே கற்களும் வரிச் சுவையினில்/
கவிப் புலமைக்குள் வியக்குமே தமிழுமே/

எட்டையும் தாண்டாப் பள்ளிப் படிப்பால்/
தீட்டிய திரையிசைப் பாடல்கள் பொக்கிசங்களே/
ஏட்டினைத் தழுவிய பொன் எழுத்துக்கள்/
வெட்டவெளிக்குள் ஒலிக்கின்றதே சங்கீத மொழியாகி/

சிறுகூடல்பட்டி முத்தையா சிந்தைக்குள் கவியரசானார்/
செதுக்கிய சிற்றிலக்கியங்களும் காப்பியங்களும் நூல்களும்/
இலக்கியத் தடத்தின் அற்புதச் சுவடுகளாம்/
உலகமும் ரசிக்கின்றதே உன்னத படைப்புக்களை/ 

வாழ்வியல் உணர்வினை வடித்த இலக்கியங்கள்/
வாழ்கின்றன நம்முடன் அனுபவங்களாகப் பிறந்தே/
நரைத்திடாத் தமிழ்ச் செழுமை உயிர்ப்பினில்/
வரைகின்றதே காலமும் அழியாக் கவிஞனென்று/
 
ஜன்ஸி கபூர் - 9.12.2020
 



 



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!