About Me

2020/07/18

பரத நாட்டியம்

முகவழி பாவங்களும்/
கைவழி முத்திரைகளும்/
சலங்கை ஒலியினில் ஜதியாக/
அழகிய நடனமும் விருந்தாகும்/
 

நயன விழிகள் அசைகையில்/
நவரசங்கள் கண்டேன்/
இசையுடன் ஜதியும் இசைகையில்/         
சிற்பமாய் நின்றேன்/

ஜன்ஸி கபூர் 


வான் சிறப்பு


குறள் 11

வானின்றி உலகம் வழங்கி வருதலால்/
தானமிர்தம் என்றுணரற் பாற்று/
 

வான்மழையும் தடையின்றித் தொடர்ந்து பொழிவதால் 
வையகமும் நிலைத்தே வாழ்கிறது அழிவின்றி
அகிலத்தில் வாழும் உயிர்களின் நிலவுகையை
அமிழ்தமாகி காத்து நிற்கிறதே இம்மழையும்
 
குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


மழை பருகி தளிர்க்கும் பயிர்களால்
மண்ணுலகமும் சிறந்தே உயிர்களும் வாழும்
தண்ணீராய் மாறி தாகமும் உடைக்கும்
உன்னத மழை உயிர்களைக்; காக்கும்

 
குறள் 13

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி

வான்மழையின் பொழிகை தடைபட்டுப் போனால்
கண்ணீராகும் கடலைச் சுற்றிய உலகும்
புண்ணாகி வருத்தும் கொடும் பசியால்
மண்ணுலகில் வாழும் உயிர்களும் இறக்கும்

ஜன்ஸி கபூர் 


2020/07/17

உனக்குள் உன்னையே தேடு


ஏழையின் அன்பு மனமே மகிழ்ந்திடு/
உழைக்கும் பாதைகளைத் தெரிந்து கொண்டால்/
உலகத்தின் அடையாளமாய் உயர்வாய் நீயும்/
உழைப்பின் பெறுமதியில்  நொருங்கும் வறுமையும்/
உனக்குள் உன்னையே நீயும் தேடு/
உனக்கும் உதவ காத்திருக்கிறதே மனிதம்/

ஜன்ஸி கபூர்  
  •  

காவிய மாலை – 07

கானகம் மீண்ட பாண்டுவின் கரங்கள்/
கொன்றன கலவியி லிணைந்த மான்களை/
கொடுங் குற்றமோ முனிவர் சாபமும்/
தடுத்து நிறுத்தியது சந்ததிப் பெருக்கத்தை/

வனமும் சென்ற மன்னனும் குந்தி தேவி/  
வரத்தால் பெற்றான் உயர்பண்பு முத்துக்களை/ 
தருமன் வீமன் அருச்சுனன் நாமத்துடன்/
மாத்திரியும் ஈன்றாள் நகுலன் சகாதேவனையும்/

பொங்கியே அழித்த காந்தாரியின் பிண்டமும்/
பெற்ற வரத்தால்  நூற்றவராய் தளிர்த்தது/
பிறப்பெடுத்தான் துரியோதனன் கெட்ட சகுனத்திலோ/
பிழம்புத் தீயுடன் யுத்தங்களும் மூண்டனவே/

ஜன்ஸி கபூர்