About Me

2020/07/18

வான் சிறப்பு


குறள் 11

வானின்றி உலகம் வழங்கி வருதலால்/
தானமிர்தம் என்றுணரற் பாற்று/
 

வான்மழையும் தடையின்றித் தொடர்ந்து பொழிவதால் 
வையகமும் நிலைத்தே வாழ்கிறது அழிவின்றி
அகிலத்தில் வாழும் உயிர்களின் நிலவுகையை
அமிழ்தமாகி காத்து நிற்கிறதே இம்மழையும்
 
குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


மழை பருகி தளிர்க்கும் பயிர்களால்
மண்ணுலகமும் சிறந்தே உயிர்களும் வாழும்
தண்ணீராய் மாறி தாகமும் உடைக்கும்
உன்னத மழை உயிர்களைக்; காக்கும்

 
குறள் 13

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி

வான்மழையின் பொழிகை தடைபட்டுப் போனால்
கண்ணீராகும் கடலைச் சுற்றிய உலகும்
புண்ணாகி வருத்தும் கொடும் பசியால்
மண்ணுலகில் வாழும் உயிர்களும் இறக்கும்

ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!