About Me

2020/07/17

காவிய மாலை – 07

கானகம் மீண்ட பாண்டுவின் கரங்கள்/
கொன்றன கலவியி லிணைந்த மான்களை/
கொடுங் குற்றமோ முனிவர் சாபமும்/
தடுத்து நிறுத்தியது சந்ததிப் பெருக்கத்தை/

வனமும் சென்ற மன்னனும் குந்தி தேவி/  
வரத்தால் பெற்றான் உயர்பண்பு முத்துக்களை/ 
தருமன் வீமன் அருச்சுனன் நாமத்துடன்/
மாத்திரியும் ஈன்றாள் நகுலன் சகாதேவனையும்/

பொங்கியே அழித்த காந்தாரியின் பிண்டமும்/
பெற்ற வரத்தால்  நூற்றவராய் தளிர்த்தது/
பிறப்பெடுத்தான் துரியோதனன் கெட்ட சகுனத்திலோ/
பிழம்புத் தீயுடன் யுத்தங்களும் மூண்டனவே/

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!