எழுத்தறிவின் பண்படுத்தலில் நம் வாழ்வும்/
வளர்த்திடுமே அறிவையும் தகுதியையும் என்னாளும்/
கருத்தையும் சுதந்திரமாக முன்வைத்திடுமே எழுத்தும்/
வருந்தும் மானிடத்தையும் காத்திடுமே ஆயுதமாக/
ஜன்ஸி கபூர்
எழுத்தறிவின் பண்படுத்தலில் நம் வாழ்வும்/
வளர்த்திடுமே அறிவையும் தகுதியையும் என்னாளும்/
கருத்தையும் சுதந்திரமாக முன்வைத்திடுமே எழுத்தும்/
வருந்தும் மானிடத்தையும் காத்திடுமே ஆயுதமாக/
ஜன்ஸி கபூர்
என் தமிழே
----------------------
சங்கே முழங்காக முழங்குகின்ற நற்றமிழே/
சிங்கத் தமிழனின் மூச்சே தாய்மொழிக்காக/
மங்காத் தமிழுக்கே ஆற்றிடும் தொண்டுதனில்/
தேங்குதே இன்பமும் மனதினை நிறைத்தே/
அமிழ்தும் தமிழைப் படித்தேன் தினமும்/
அற்புத இலக்கியத்தின் வரிகளைச் சுவைக்கையில்/
சொற்பத அழகில் சொருகின இன்பமும்/
கற்பதும் சுவைத்திட உணர்வுக்குள்ளும் அதிர்வே/
என் தமிழே ஆழ்மனதின் முரசே/
செந்தமிழின் புத்துணர்வால் விளைந்திட்ட காவியங்களில்/
சிந்திய மொழிப் புலமையின் அற்புதத்தினில்/
சந்திரப் பேரொளியும் நனைத்ததே மனதினை/
தமிழின் உயர்ச்சியில் மலையெனவே அறிவும்/
கமழ்கின்றதே அறமும் புதுப் பொலிவாகி/
தழுவுகின்றேனே தினமும் தமிழையே வாழ்வாக/
வாழ்கின்றேனே முத்தமிழையும் பற்றும் நற்குடியாக/
ஜன்ஸி கபூர் - 7.09.2020
கிராமம் உயிர்க்கின்றது பண்பாடுகளின் சுவடாய்
இயற்கை எழிலும் கொஞ்சிடுதே ஆனந்தமாக
கழனிகளின் இதயமாகி பசுமையாகப் பூக்கையில்
களித்திடுமே மனமும் மாசில்லாத வாழ்வுக்குள்ளே
ஜன்ஸி கபூர்
நீ வருவாயென காத்திருக்கிறதே மனதும்//
நீங்காத நினைவுகளால் போர்க்கின்றதே சுகமும்//
தூங்காமல் பூக்கின்றதே விழிகளும் தினமும்//
ஏங்கிடும் மனதுக்குள் உலாவுதே கனவும்//
முட்படுக்கைத் தலையணையும் மோகனப் பஞ்சனையாய்//
ஆட்கொள்ளுமே உன் மடி சாய்கையிலே//
வெட்கத்தை ரசித்திடும் உந்தன் புன்னகையைத்//
தொட்டு அணைக்கின்றேனே நிதமும் என்னுள்ளே//
ஜன்ஸி கபூர்