About Me

2020/09/07

நீ வருவாயென


நீ வருவாயென காத்திருக்கிறதே மனதும்//

நீங்காத நினைவுகளால் போர்க்கின்றதே சுகமும்//

தூங்காமல் பூக்கின்றதே விழிகளும் தினமும்// 

ஏங்கிடும் மனதுக்குள் உலாவுதே கனவும்//


முட்படுக்கைத் தலையணையும் மோகனப் பஞ்சனையாய்//

ஆட்கொள்ளுமே உன் மடி சாய்கையிலே//

வெட்கத்தை ரசித்திடும் உந்தன் புன்னகையைத்//

தொட்டு அணைக்கின்றேனே நிதமும் என்னுள்ளே//


ஜன்ஸி கபூர்  








No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!