பாரதி புலமையும் பன்மொழியில் முழங்கியது
முழங்கியது உணர்வும் காக்கையின் சிந்தனையில்
சிந்தனையில் சீர்திருத்தம் உயிர்த்தனவே கவிதைகள்
கவிதைகள் வாழ்வாக வாழ்ந்தாரே பாரதி
ஜன்ஸி கபூர்
பாரதி புலமையும் பன்மொழியில் முழங்கியது
முழங்கியது உணர்வும் காக்கையின் சிந்தனையில்
சிந்தனையில் சீர்திருத்தம் உயிர்த்தனவே கவிதைகள்
கவிதைகள் வாழ்வாக வாழ்ந்தாரே பாரதி
ஜன்ஸி கபூர்
துளியேனும் வீழ்ந்திடாதோ நீரும் பருகிட/
அழிகின்ற பசுமையால் பாலைவனமாகின்றதே தேசமும்/
பழிவந்து சேருமோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கே/
தெளிகின்ற சிந்தனைகளால் காத்திடுக இயற்கைதனை/
பொழிகின்ற மழையும் பொக்கிசமே எமக்கு/
விழுகின்ற நீரினைச் சேமிப்போம் வாழ்வதற்கே/
ஜன்ஸி கபூர்
நேர்மறை
நரைக்காத அன்பு
---------------------------------
உதிர வழிப் பூவின் வாசத்தில்
உவகையும் கொள்ளுதே பாட்டியின் மனதும்
இறுக்கி அணைத்திடும் சுருக்கத் தேகத்தினிலும்
இதமான சுகமும் பேத்தியின் உணர்வுக்குள்
நரைத்திடாத இளமை அன்புக்குள் இருவரும்
எதிர்மறை
சினத்தின் துடிப்பு
கண்டதும் காதலால் மகளவள் தாய்மைக்குள்
காழ்ப்புணர்ச்சி கொண்டாளே கிழவியும் தனக்குள்
உதறிய மகளுக்குள் உருவான உறவினால்
உணர்வுகளுக்குள் தீப்பந்தம் பந்தமதை சுட்டெரிக்க
தவிக்கின்றாளே தங்கக் குழந்தையும் துயரத்தோடு
ஜன்ஸி கபூர் - 11.09.2020
ஆசைகள் நீள்கின்ற அடங்கிடாத மனதின்/
ஓசையாக பெருந் துன்பமும் இசைகின்றதே/
காசும் ஆள்கின்ற மனித வாழ்வுக்குள்ளே/
தாவுகின்றதே மனம் ஒரு குரங்காக/
காண்பனவற்றில் அலைந்திடும் திருப்தியற்ற உணர்வினால்/
கானலுக்குள் கரைகின்றதே வனப்பான எதிர்காலம்/
ஜன்ஸி கபூர் - 11.09.2020