பஞ்சுக் கன்னத்தில் புன்னகை/
பிஞ்சு விரல்கள்/
சிரிக்கின்ற கண்கள்/
சிந்தையைத் தொடுகின்றதே கவிதைகளாகி/
ஜன்ஸி கபூர் - 25.09.20
பஞ்சுக் கன்னத்தில் புன்னகை/
பிஞ்சு விரல்கள்/
சிரிக்கின்ற கண்கள்/
சிந்தையைத் தொடுகின்றதே கவிதைகளாகி/
ஜன்ஸி கபூர் - 25.09.20
தொண்டையும் நனைத்திட ஊற்றிடும் நீர்தான்/
எண்ணத்தின் துடிப்பை குளிர்த்துமோ தினமும்/
திரையும் உண்டோ தணியாத தாகத்திற்கே/
நரையில்லா வாலிப மிடுக்கில் தாகமே/
மலரும் தழுவும் நறுமணத்தின் ஈர்ப்பில்/
கலையாத கனவுகளும் நீளுமே இலக்கில்/
அமிர்தத் தமிழின் கிரீடமாக அவனியும்/
அழகாகுமே அறிவைத் தேடும் பயணத்திலே/
கற்கும் கல்வியும் நற்குடியாக மாறிட/
பற்றுமே அறிவும் ஆளுமையும் சிந்தைக்குள்/
கறை நீக்கி சுதந்திரத்தினை ஆளவே/
மறை தரும் ஒழுக்கத்தைத் தேடுவோமே/
ஜன்ஸி கபூர் - 24.09.2020
தாய்மையின் அணைப்பும் மொழிகின்ற அன்பை
சேயும் உணருமே பாசத் துடிப்பிலே
வறுமைப் பிணியிலே தள்ளாடும் தாயுள்ளம்
வழி தெரியாது தவிக்கின்றதே தரணியிலே
அழுகின்றதே நெஞ்சும் பிள்ளையைக் காத்திடத்தானே
ஜன்ஸி கபூர் - 24.09.2020
வானவீதியில் உலாவும் மேக ஊர்வலத்தில்/
ஊர்வலத்தில் பன்னீரைத் தூவுதே மழையும்/
மழையும் பொழிகையில் மண்வாசம் மூச்சுக்குள்/
மூச்சுக்குள் பின்னிடுமே இயற்கையின் நேசமே/
நேசமே செழிக்கையில் வாழ்ந்திடுமே தேசமும்/
தேசமும் மகிழ்ந்திடுமே சுயநலமற்ற அன்பினால்/
அன்பினால் ஆளலாம் அகிலத்தின் மாந்தரை/
மாந்தரையும் வாழவைக்கும் ஆதவனும் வான்வீதியில்/
வான வீதியில்
---------------------
வான வீதியில் பறக்கின்றதே சிறகுகள்/
சிறகின் வருடலில் மயங்குதே மனதும்/
மனதை வருடுகின்றதே தென்றலும் சுகமாக/
சுகத்தின் சுவையினை இரசிக்கின்றதே விழிகளும்/
விழிகளை ஈர்க்கின்ற மதியும் அழகே/
அழகின் கோலங்களை பிசைகின்றதே இயற்கையும்/
இயற்கையும் வரைகின்றதே அற்புத ஓவியங்களை/
ஓவியங்களைத் தீட்டிடுமே வானவில் தூரிகையும்/
தூரிகையும் வரைகின்றதே ஏழு வர்ணங்களை/
வர்ணக் கலவைதானே வான வீதியும்/