About Me

2020/09/25

குழந்தை

 


பஞ்சுக் கன்னத்தில் புன்னகை/

பிஞ்சு விரல்கள்/

சிரிக்கின்ற கண்கள்/

சிந்தையைத் தொடுகின்றதே கவிதைகளாகி/


ஜன்ஸி கபூர் - 25.09.20




2020/09/24

தணியாத தாகம்

தொண்டையும் நனைத்திட ஊற்றிடும் நீர்தான்/

எண்ணத்தின் துடிப்பை குளிர்த்துமோ தினமும்/

திரையும் உண்டோ தணியாத தாகத்திற்கே/

நரையில்லா வாலிப மிடுக்கில் தாகமே/


மலரும் தழுவும் நறுமணத்தின் ஈர்ப்பில்/

கலையாத கனவுகளும் நீளுமே இலக்கில்/

அமிர்தத் தமிழின் கிரீடமாக அவனியும்/

அழகாகுமே அறிவைத் தேடும் பயணத்திலே/


கற்கும் கல்வியும் நற்குடியாக மாறிட/

பற்றுமே அறிவும் ஆளுமையும் சிந்தைக்குள்/

கறை நீக்கி சுதந்திரத்தினை ஆளவே/

மறை தரும் ஒழுக்கத்தைத் தேடுவோமே/


ஜன்ஸி கபூர் - 24.09.2020








தள்ளாடும் தாயுள்ளம்

 


தாய்மையின் அணைப்பும் மொழிகின்ற அன்பை

சேயும் உணருமே பாசத் துடிப்பிலே

வறுமைப் பிணியிலே தள்ளாடும் தாயுள்ளம்

வழி தெரியாது தவிக்கின்றதே தரணியிலே

அழுகின்றதே நெஞ்சும் பிள்ளையைக் காத்திடத்தானே 

ஜன்ஸி கபூர் - 24.09.2020

 

2020/09/23

வான வீதியில்

 


வானவீதியில் உலாவும் மேக ஊர்வலத்தில்/

ஊர்வலத்தில் பன்னீரைத் தூவுதே மழையும்/

மழையும் பொழிகையில் மண்வாசம் மூச்சுக்குள்/

மூச்சுக்குள் பின்னிடுமே இயற்கையின் நேசமே/


நேசமே செழிக்கையில் வாழ்ந்திடுமே தேசமும்/

தேசமும் மகிழ்ந்திடுமே சுயநலமற்ற அன்பினால்/

அன்பினால் ஆளலாம் அகிலத்தின் மாந்தரை/

மாந்தரையும் வாழவைக்கும் ஆதவனும் வான்வீதியில்/


 

வான வீதியில்

 ---------------------

வான வீதியில் பறக்கின்றதே சிறகுகள்/

சிறகின் வருடலில் மயங்குதே மனதும்/


மனதை வருடுகின்றதே தென்றலும் சுகமாக/

சுகத்தின் சுவையினை இரசிக்கின்றதே விழிகளும்/


விழிகளை ஈர்க்கின்ற மதியும் அழகே/

அழகின் கோலங்களை பிசைகின்றதே இயற்கையும்/


இயற்கையும் வரைகின்றதே அற்புத ஓவியங்களை/

ஓவியங்களைத் தீட்டிடுமே வானவில் தூரிகையும்/


தூரிகையும் வரைகின்றதே ஏழு வர்ணங்களை/

வர்ணக் கலவைதானே  வான வீதியும்/