About Me

2020/09/24

தணியாத தாகம்

தொண்டையும் நனைத்திட ஊற்றிடும் நீர்தான்/

எண்ணத்தின் துடிப்பை குளிர்த்துமோ தினமும்/

திரையும் உண்டோ தணியாத தாகத்திற்கே/

நரையில்லா வாலிப மிடுக்கில் தாகமே/


மலரும் தழுவும் நறுமணத்தின் ஈர்ப்பில்/

கலையாத கனவுகளும் நீளுமே இலக்கில்/

அமிர்தத் தமிழின் கிரீடமாக அவனியும்/

அழகாகுமே அறிவைத் தேடும் பயணத்திலே/


கற்கும் கல்வியும் நற்குடியாக மாறிட/

பற்றுமே அறிவும் ஆளுமையும் சிந்தைக்குள்/

கறை நீக்கி சுதந்திரத்தினை ஆளவே/

மறை தரும் ஒழுக்கத்தைத் தேடுவோமே/


ஜன்ஸி கபூர் - 24.09.2020








No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!