About Me

2020/09/23

வான வீதியில்

 


வானவீதியில் உலாவும் மேக ஊர்வலத்தில்/

ஊர்வலத்தில் பன்னீரைத் தூவுதே மழையும்/

மழையும் பொழிகையில் மண்வாசம் மூச்சுக்குள்/

மூச்சுக்குள் பின்னிடுமே இயற்கையின் நேசமே/


நேசமே செழிக்கையில் வாழ்ந்திடுமே தேசமும்/

தேசமும் மகிழ்ந்திடுமே சுயநலமற்ற அன்பினால்/

அன்பினால் ஆளலாம் அகிலத்தின் மாந்தரை/

மாந்தரையும் வாழவைக்கும் ஆதவனும் வான்வீதியில்/


 

வான வீதியில்

 ---------------------

வான வீதியில் பறக்கின்றதே சிறகுகள்/

சிறகின் வருடலில் மயங்குதே மனதும்/


மனதை வருடுகின்றதே தென்றலும் சுகமாக/

சுகத்தின் சுவையினை இரசிக்கின்றதே விழிகளும்/


விழிகளை ஈர்க்கின்ற மதியும் அழகே/

அழகின் கோலங்களை பிசைகின்றதே இயற்கையும்/


இயற்கையும் வரைகின்றதே அற்புத ஓவியங்களை/

ஓவியங்களைத் தீட்டிடுமே வானவில் தூரிகையும்/


தூரிகையும் வரைகின்றதே ஏழு வர்ணங்களை/

வர்ணக் கலவைதானே  வான வீதியும்/





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!