About Me

2020/12/13

குற்றம் குற்றமே

 



 

 

 நாவோடு செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/

நோவெடுக்க உதட்டில் மொழிகின்றனர் பிறமொழியை/

தாயக நிழலுக்குள் தூய்மை வாழ்விருக்க/

நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் அணைந்திடவே/


அனுபவம் தராத அறிவினை யேற்றி/

அடைக்கலமாகின்றனர் ஏடுகளுக்குள் திறனற்றுக் கற்க/

மனிதம் தொலைத்து அணிகின்ற வேடங்கள்/

புனிதம் இழந்தே புகழையும் பறிக்கும்/


உறவுகள் வருந்துகையில் பஞ்சணை உறக்கம்/

உணரார் உணர்வுகளை மிதித்தல் குற்றமென/  

தவறுகளை மறைத்தே வாழ்ந்திட நினைக்கையில்/

ஏறுகின்றதே குற்றங்கள் நிம்மதியும் அழிய/


 ஜன்ஸி கபூர்  - 13.12.2020

-----------------------------------------------------------------------------------------

குற்றம் குற்றமே

-----------------------

நாவில் செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/

நாகரிக உலகில் கைகோர்க்கின்றனர் பிறமொழியுடன்/

தாயக நிழலின் அருமை புரியாமல்/

நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் வாழ்ந்திடவே/


அனுபவம் இல்லாக் கல்வியைக் கற்றால்/

அடுத்தவரிடம் கையேந்தும் அவலம் நீளும்/

மனிதம் தொலைத்தே அணிகின்ற வேடங்கள்/

புனிதம் இழந்து தவற்றில் குவியும்/


சட்டம் மதிக்காமல் பண்பாடும் பேணாமல்/

கழியும் பொழுதுகள் கறைகள் சூழுமே/

செய்கின்ற குற்றங்கள் சிதையாது தொடரும்/

உண்மையை ஏற்காப் பண்புகளும் இழுக்கே/


ஜன்ஸி கபூர்





2020/12/10

மகிழ்வுப் பயணம்


 

நீரோட்ட மடியும் தாங்குகின்ற பாதையில்/

வேரோடுகின்றதே உறவுப்பாலமும் வேற்றுமைகளை மறைத்தே/

ஓடையை ஊடறுத்த நடைப்பயணச் சுவட்டினில்/

ஓற்றுகின்றதே உற்சாகமும் அழகை உறிஞ்சியபடி/


விழிகளும் ரசிக்கின்ற அழகிய இயற்கைக்குள்/

எழுதியதே விஞ்ஞானமும் அறிவின் விரல்களால்/

நழுவும் காற்றையும் ஆற்றுக்குள் விழுத்திடாது/

தழுவுகின்றதே தேகமும் குளிரை ஏந்தியபடி/


பேதங்களைக் களைந்தே பயணத்தில் இணைவோர்/

சேதமின்றி மறுகரையைச் சேர்ந்திடுவார் அறிவியலால்/

வான் கருணையால் வாழ்கின்ற பசுமையைக்/

காண்கின்ற மனங்களும் களிக்கின்றதே இரசனைக்குள்/

 

ஜன்ஸி கபூர் - 10.12.2020

 

2020/12/09

Sahrish cert

 உலா வரும் நிலா

+++++++++++++++++

இருளும் கலைகின்றதே ஒளியினிலே/

விருந்தும் ஆகின்றாய் விழிகளுக்கே/

ஒளிரும் உந்தன் அழகினிலே/

மிளிருதே வானும் மகிழ்வினிலே/


சஹ்ரிஸ் சதாத் - 9.12.2020

---------------------------------------------------------------------

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன்




 
காவியத் தாய் கண்டெடுத்த கண்ணதாசன்/
கவியுலகம் சூடிக் கொண்ட மணிமகுடமே/
கரையுமே கற்களும் வரிச் சுவையினில்/
கவிப் புலமைக்குள் வியக்குமே தமிழுமே/

எட்டையும் தாண்டாப் பள்ளிப் படிப்பால்/
தீட்டிய திரையிசைப் பாடல்கள் பொக்கிசங்களே/
ஏட்டினைத் தழுவிய பொன் எழுத்துக்கள்/
வெட்டவெளிக்குள் ஒலிக்கின்றதே சங்கீத மொழியாகி/

சிறுகூடல்பட்டி முத்தையா சிந்தைக்குள் கவியரசானார்/
செதுக்கிய சிற்றிலக்கியங்களும் காப்பியங்களும் நூல்களும்/
இலக்கியத் தடத்தின் அற்புதச் சுவடுகளாம்/
உலகமும் ரசிக்கின்றதே உன்னத படைப்புக்களை/ 

வாழ்வியல் உணர்வினை வடித்த இலக்கியங்கள்/
வாழ்கின்றன நம்முடன் அனுபவங்களாகப் பிறந்தே/
நரைத்திடாத் தமிழ்ச் செழுமை உயிர்ப்பினில்/
வரைகின்றதே காலமும் அழியாக் கவிஞனென்று/
 
ஜன்ஸி கபூர் - 9.12.2020