About Me

2021/04/21

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற

கணியர் கருத்தால் காசினியும் உவக்கும்

காலம் போற்றும் வாழ்வியல் முறையினை

உணர்ந்தே ஏற்றால் வாழ்வும் சிறக்கும்


உலக மக்கள் யாவரும் ஒன்றென

உறவாய்க் கருதி உணர்வால் கலப்போம்

எல்லா ஊரும் எமக்கு ஒன்றே

ஏற்போம் மக்களை அன்பால் கவர்ந்தே


வாழ்வில் தொடரும் நன்மை தீமை

வந்தணையும் இன்பம் துன்பம் யாவுமே

வருமே ஊழால்தானே தருவாரோ பிறரும்

அறத்தின் நிழலாய் ஒழுகுவோம் உணர்வினை


இறப்பும் பிறப்பும் புதுமை நிகழ்வோ

இறைவன் சித்தம் இயற்கை வழியே

இவ்வுலக இன்பமும் துன்பமும் நீடிக்குமோ

வெறுப்பினால் உரைத்திடலாகுமோ உலகம் இனிதன்று


கார்மேகம் பிணைந்தே ஊற்றும் மழைநீர்

களிப்பினில் ஒன்றாகுமே பேராற்று நீராகி

இயற்கையின் மடியினில் இசைந்திடுமே வாழ்வும்

இன்மொழி நவின்றனரே ஆன்றோரும் முன்னர்


பெரியோரைப் பெருமையில் வியந்தே பார்த்திடலும்

எளியோர் சிறியோரை இகழ்ந்தே தூற்றலும்

தவறென்றே உணர்ந்திடுவோம் சரிநிகராக மதித்திடுவோம்

தரணிக்குள் சமத்துவம் பேணியே வாழ்ந்திடுவோம்


ஜன்ஸி கபூர் 



காதல்

அன்பின் உணர்வுக்குள்

ஆரத்தழுவுமே காதல்

பிரிவின் வலிக்குள்

உயிரையும் வெறுக்கும்

அன்பால் உழுவோம்

 

பசுமை போர்த்தும் பரந்த வெளியில்/
பயிரின் சிரிப்பில் விளைச்சல் செழிக்கும்/
காற்றின் அலைவில் நாற்றும் இசைக்கும்/
கானம் நெஞ்சில் மோதி இரசிக்கும்/

நெற்றி வியர்வை வீழ்த்தும் முத்துக்கள்/
நெஞ்சக் கவலைதனை அழிக்கும் சொத்துக்கள்/
விதைக்கும் உழைப்பும் விளையும் பொன்னாக/
விலகும் துன்பத்தால்  உலகும் உயிர்க்கும்/

இயற்கை அழகைச் சிதைத்திடா உழவிலே/
இதயம் பிணைப்போம் பஞ்சமும் நீங்க/
அன்னை பூமியை அணைத்தே பயிரிட்டு/
அன்பால் உழுவோம் வாழ்வும் உயரவே/    

ஜன்ஸி கபூர்

திசை மறந்த பறவைகள்

அழிகின்ற இயற்கை வடிக்கின்ற கண்ணீர்/
வழி மாற்றுமே பறவைகளின் இருப்பை/
விஞ்ஞானம் தேடும் அறிவியல் புரட்சிக்குள்/
அஞ்சிடுமே அன்றில்கள் சிறகுகளையும் அறுத்தே/

நிமிர்கின்ற கைபேசிக் கோபுர அலைகள்/
நெறிக்கின்றதே குரல்வளைப் பூக்களின முடிச்சை/
நவீனத் தேடலும் சிதைக்கின்ற சோலைகள்/
நனைந்திடும தீக்குள் உமிழ்கின்றதே வெம்மையை/

காடுகளை உடைத்துச் சாலைகளை நீட்டுகையில்/
வாடுகின்றனவே சிற்றுயிர்களும் தேடுகின்றனவே வாழ்வியலை/
நாடுகின்ற வெறுமைக்குள் மூடுகின்றதே செழிப்பும்/
கூடுகளும் உடைந்தே துடிக்கின்றனவே உயிர்கள்/

வானுயர்க் கட்டிடங்கள் வாசலினை மறைத்திட/
வாழ்வின் தடங்களும் மறைந்தே அழிகையில்/
துடிக்குமே சிறகுகள் திசைமாறிப் பறந்திட/
படித்தும் அறிவிலி மானிடர் வதையிது/

ஜன்ஸி கபூர்