About Me

2021/04/21

அன்பால் உழுவோம்

 

பசுமை போர்த்தும் பரந்த வெளியில்/
பயிரின் சிரிப்பில் விளைச்சல் செழிக்கும்/
காற்றின் அலைவில் நாற்றும் இசைக்கும்/
கானம் நெஞ்சில் மோதி இரசிக்கும்/

நெற்றி வியர்வை வீழ்த்தும் முத்துக்கள்/
நெஞ்சக் கவலைதனை அழிக்கும் சொத்துக்கள்/
விதைக்கும் உழைப்பும் விளையும் பொன்னாக/
விலகும் துன்பத்தால்  உலகும் உயிர்க்கும்/

இயற்கை அழகைச் சிதைத்திடா உழவிலே/
இதயம் பிணைப்போம் பஞ்சமும் நீங்க/
அன்னை பூமியை அணைத்தே பயிரிட்டு/
அன்பால் உழுவோம் வாழ்வும் உயரவே/    

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!