About Me

2021/04/21

திசை மறந்த பறவைகள்

அழிகின்ற இயற்கை வடிக்கின்ற கண்ணீர்/
வழி மாற்றுமே பறவைகளின் இருப்பை/
விஞ்ஞானம் தேடும் அறிவியல் புரட்சிக்குள்/
அஞ்சிடுமே அன்றில்கள் சிறகுகளையும் அறுத்தே/

நிமிர்கின்ற கைபேசிக் கோபுர அலைகள்/
நெறிக்கின்றதே குரல்வளைப் பூக்களின முடிச்சை/
நவீனத் தேடலும் சிதைக்கின்ற சோலைகள்/
நனைந்திடும தீக்குள் உமிழ்கின்றதே வெம்மையை/

காடுகளை உடைத்துச் சாலைகளை நீட்டுகையில்/
வாடுகின்றனவே சிற்றுயிர்களும் தேடுகின்றனவே வாழ்வியலை/
நாடுகின்ற வெறுமைக்குள் மூடுகின்றதே செழிப்பும்/
கூடுகளும் உடைந்தே துடிக்கின்றனவே உயிர்கள்/

வானுயர்க் கட்டிடங்கள் வாசலினை மறைத்திட/
வாழ்வின் தடங்களும் மறைந்தே அழிகையில்/
துடிக்குமே சிறகுகள் திசைமாறிப் பறந்திட/
படித்தும் அறிவிலி மானிடர் வதையிது/

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!