2021/04/22
மன வலிமை
குறள் கவிதைகள்
குறள் 971:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
#ஒளிஒருவற்கு_உள்ள_வெறுக்கை_இளிஒருவற்கு
#அஃதிறந்து_வாழ்தும்_எனல்.
ஊக்கத்தின் உயர்வினில் பெருமை
பிறர் செய்திடாத நற்செயல்களை நானும்/
செய்திடுவேனெனும் ஊக்கம் கொண்டோரே தம்முள்/
பெற்றிடுவார் பெருமையெனும் நற்பண்பினைச் சிறப்பாக/
அன்றேல் அவ்வூக்கமின்றி வாழ்தலே போதுமென்று/
சிந்தைக்குள் கருத்தினைப் பெற்றே இழிந்திடுவோர்/
இணைத்திடுவார் உளத்தில் உளக்குமுறலெனும் மாசினை/
கஸ்தூரி மஞ்சள்
அற்புத பயன்களை அள்ளித் தருமே/
அழகின் மகுடம் அருமையான கஸ்தூரி/
அழற்சி எதிர்ப்பும் அகன்றே போகும்/
அழுக்கின் ஒவ்வாமை அதிர்ந்தே ஓடும்/
அணுகாதே புற்றுநோயும் அழியுமே பாக்றீரியாவும்/
அவசியம் நமக்கே அறிவோம் பயன்களை/
அரைத்த மஞ்சள் அகற்றுமே வடுக்களை/
அடிபட்ட வலியின் அருமருந்தும் இதுவே/
தோலின் நோய்கள் தோற்றே போகும்/
தேமல் வந்தால் தேடியே போவோமே/
தேனுடன் கலந்தால் தோன்றாதே வயிற்றுவலியும்/
தேவை மஞ்சளே சருமம் பொலிவிற்கே/
சித்த வைத்தியம் சொல்லும் இரகசியம்/
சிந்தை மகிழவே தூளைப் பூசுவோம்/
இளமை முகம் இதய சுகம்/
இன்றே பயனடைவோம் இனிய மஞ்சளால்/





