About Me

2021/04/22

குறள் கவிதைகள்


(குறள்  - 65) 
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
 
இல்வாழ்வும் தந்திடும்    குழந்தைச் செல்வமே/
இனித்திடும் இன்பமாம்   இவ்வுலக வாழ்வில்/

குழந்தையின் தழுவலில்  துளிர்க்குமே மகிழ்வும்/
மழலையின் மொழியினைச்  சுவைத்திடுமே செவியும்/4

உளத்தையும் உடலையும்  அணைக்கின்ற மக்களால்/
உணர்கின்ற இன்பமே துன்பத்திற்கான மருந்தே/

சேயின் மெய்தீண்டலில் வழிந்தோடும் வலியும்/
சேர்த்திடுவர் களிப்பினை  மக்கள் செல்வத்தினர்/ 8
                                                                                              
   (குறள்  - 68) 
 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
 
பிறப்பின் பயனாம்  பெற்றோருக்கும் நன்மக்களாவது/
சிறப்பான உயர்வும்  தந்திடுமே இன்பமே/

அறிவின் உயர்ச்சிக்குள்  உயிர்த்திடும் பிள்ளையால்/
ஆனந்தமே துளிர்க்கும்  பெற்றவர்கள் நெஞ்சுக்குள்/4

 தன் பிள்ளையின்  உயர்வின் மலர்ச்சியில்/
துன்பம் கரைத்து  மனமும் களிப்பிலாடும்/  

அறம்தானே அகிலத்தின்  உயிர்களுக்கும் இன்பமளித்தல்/
அகமகிழ்ச்சிக்குள் அனைவரையும்  இசைத்திடுமே அறிவுடைமை/ 8

ஜன்ஸி கபூர்  

  குறள் 971:

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

 

குறள் 972:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

 

#ஒளிஒருவற்கு_உள்ள_வெறுக்கை_இளிஒருவற்கு

#அஃதிறந்து_வாழ்தும்_எனல்.

ஊக்கத்தின் உயர்வினில் பெருமை


பிறர் செய்திடாத நற்செயல்களை நானும்/

செய்திடுவேனெனும் ஊக்கம் கொண்டோரே தம்முள்/

பெற்றிடுவார் பெருமையெனும் நற்பண்பினைச் சிறப்பாக/

அன்றேல் அவ்வூக்கமின்றி வாழ்தலே போதுமென்று/

சிந்தைக்குள் கருத்தினைப் பெற்றே இழிந்திடுவோர்/

இணைத்திடுவார் உளத்தில் உளக்குமுறலெனும் மாசினை/


  


 



 


 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!