பாரினை ஆளும் பணமும் நிலையற்றதே/
பத்தும் செய்யும் பஞ்சமாபாதக வித்திது/
பரபரப்பு வாழ்வில் பாசத்தையும் துறக்கும்/
பதுக்கிடும் போதெல்லாம் பறித்திடுமே நிம்மதியை/
பாதாளம் பாய்ந்து பண்பதனை மாற்றும்/
பலவழிகளிலும் தேடிடவே பம்பரமாகச் சுழற்றுமே/
ஜன்ஸி கபூர்
பாரினை ஆளும் பணமும் நிலையற்றதே/
பத்தும் செய்யும் பஞ்சமாபாதக வித்திது/
பரபரப்பு வாழ்வில் பாசத்தையும் துறக்கும்/
பதுக்கிடும் போதெல்லாம் பறித்திடுமே நிம்மதியை/
பாதாளம் பாய்ந்து பண்பதனை மாற்றும்/
பலவழிகளிலும் தேடிடவே பம்பரமாகச் சுழற்றுமே/
ஜன்ஸி கபூர்
சுட்டெரிக்கும் வெயிலும் தேகத்தைப் பருகிட/
வாட்டமே வாழ்வாகத் தேயிலைத் தோட்டத்தில்/
பறித்திடும் கொழுந்தும் சிவக்குதே ஏழ்மையில்/
அறிந்திடாக் கபடத்தில் வாழ்வும் பலியாகுதே/
பஞ்சத்தில் வெந்திடும் நெஞ்சத்தின் ஏக்கத்தை/
அஞ்சாமல் சுரண்டிடுதே வஞ்சக முதலைகள்/
தொழிலாளி நலத்தை விழுங்கிடும் முதலாளித்துவம்/
தொல்லைமிகு அட்டையாக உழைப்பையும் உறிஞ்சுகிறதே/
ஜன்ஸி கபூர்
பசுமை நினைவுகளின் இதமான அணைப்பினில்
பரவுகின்றதே மகிழ்வும் தேகமும் சிலிர்த்திட
கொஞ்சும் விழிகளின் காதல் பார்வையில்
பஞ்சு மேனியும் நாணத்தில் சிவக்கிறதே/
தழுவுகின்ற சிறகினில் உரசுகின்ற தென்றலும்
மஞ்சள் முகத்திலே முத்தங்களைப் பொறிக்கையில்
வட்டக் கருவிழிதனில் மொய்த்திருக்கும் அன்பினைச்
சூடுகின்றதே கனவும் சூழுகின்றதே வனப்பும்/
இரகசியச் சந்திப்பில் இசைகின்ற உயிர்களில்
இரேகைகளாகப் படிகின்றதே ஊடற் சுகமும்
இதயம் குளிர்கின்றதே உதயத்தின் அலைவினில்
இரசிக்கின்றேன் வண்ணங்களைத் தெளிக்கின்ற காதலையே
ஜன்ஸி கபூர்
பிறை நெற்றியில் படர்ந்திடும் கூந்தலைப்//
பின்னியதோ கார்மேகமும் கற்பனையும் சுவைக்கின்றதே//
கசிகின்ற அன்பினால் உனையே மீட்டுகின்றேன்//
கரும்பினைப் பிழிகின்றாய் மனதின் ஓரங்களில்//
கூர் விழிகளும் வீழ்த்திடும் மோகத்தில்//
சூடினேன் உனையே செதுக்குகின்றாய் நினைவுக்குள்//
சிரிக்கின்றாய் உதிர்கின்றனவே பௌர்ணமித் துகள்கள்//
பறிக்கின்றேன் தென்றலே உனையே சுவாசத்துள்//
விரலும் தீண்டா மென் காதலால்//
உரசினேன் உன்றன் உயிரினை அன்பே//
சிவக்கின்றாய் சிந்தைக்குள் எனையும் சிறைப்பிடித்தே//
ரசிக்கின்றேன் அன்னப் பெடையே நாணமேனோ//
ஜன்ஸி கபூர்