About Me

2021/04/22

அன்னப் பெடையே நாணமேனோ


பிறை நெற்றியில் படர்ந்திடும் கூந்தலைப்//  

பின்னியதோ கார்மேகமும் கற்பனையும் சுவைக்கின்றதே//


கசிகின்ற அன்பினால் உனையே மீட்டுகின்றேன்//

கரும்பினைப் பிழிகின்றாய் மனதின் ஓரங்களில்//


கூர் விழிகளும் வீழ்த்திடும் மோகத்தில்//

சூடினேன் உனையே செதுக்குகின்றாய் நினைவுக்குள்//


சிரிக்கின்றாய் உதிர்கின்றனவே பௌர்ணமித் துகள்கள்//

பறிக்கின்றேன் தென்றலே உனையே சுவாசத்துள்//


விரலும் தீண்டா மென் காதலால்//

உரசினேன் உன்றன் உயிரினை அன்பே//


சிவக்கின்றாய் சிந்தைக்குள் எனையும் சிறைப்பிடித்தே//

ரசிக்கின்றேன் அன்னப் பெடையே நாணமேனோ//


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!