எல்லைக் குறுக்கீடின்றியே எழுகின்ற சிறகுகளெல்லாம்/
தழுவுகின்றனவே தம்மினங்களை தடமாகின்றதே சரணாலயமும்/
வேற்றுமையை வேரறுக்கும் வேடந்தாங்கல் பறவையொலி/
படர்கின்றதே சங்கீதமாகப் பரவசம் மனங்களுக்கே/
அடர்ந்த மரக்கிளைகளில் அழகான உயிர்ப்புக்கள்/
அழகான அன்பினை அகிலமும் ரசிக்குமே/
ஜன்ஸி கபூர்