அமுதூட்டும் விழியாளே/
ஆரத்தழுவினேன் உனையே
ஆனந்தம் வழிந்தோட/
இளமைச் சிற்பமே
இன்பவூற்றின் செங்கரும்பே/
ஈகையாய் எனக்களித்தாய்
உனைத்தானே எழிலே/
ஜன்ஸி கபூர் - 02.08.2020
அமுதூட்டும் விழியாளே/
ஆரத்தழுவினேன் உனையே
ஆனந்தம் வழிந்தோட/
இளமைச் சிற்பமே
இன்பவூற்றின் செங்கரும்பே/
ஈகையாய் எனக்களித்தாய்
உனைத்தானே எழிலே/
ஜன்ஸி கபூர் - 02.08.2020
விழி நீண்டிடும் கனவுக்குள்ளும் சிலிர்ப்பலைகள்
விழுந்திட்டதே உன் அன்பின் சுவையால்
தழுவிடும் முந்தன் கரங்களின் சுகத்தினில்
நழுவிடும் மின்னலும் மென்னுடல் பிணைகிறதே
தாமரைச் சாற்றினிலே ஊற்றெடுத்த உடம்பும்
தந்தியடிக்குதே உன்னைக் கண்டதும் அன்பாலே
பேச்சிலும் மூச்சிலும் நீயே நானாகி
பேரானந்தமாய் வாழ்ந்திடலாம் பல நாழியே
உந்தன் குறும்பைப் பிழிந்தூற்றும் உதட்டுக்குள்
உறவாகும் எந்தன் பெயரும் தித்திக்கும்
உன் இரேகைக்குள் பிணைந்திட்ட என்னாசைகள்
கண் வழியாய் காதலுடன் உறவுமாகும்
தேன் நிரப்பி நெய்திட்ட மேனிக்குள்
தேங்கிடுதே இன்பங்கள் தினமுனை வாசிக்க
காணும் திசையெல்லாம் படர்ந்தாய் நிழலாய்
வாழுகிறேன் நானே எனை மறந்தே
மனசுக்குள்ளும் முப்பொழுதும் உன் கற்பனைகள்
ஜன்ஸி கபூர்
தெறித்திட்ட பூமழையில் நனைந்திட்ட நிலவும்
பறித்தெடுத்த இலைக்குள் மறைக்கின்றதே உடலை
சிரித்திடும் கன்னமதில் விரிந்திடும் அழகும்
பூரிக்கின்றதே சிற்பமவள் மெல்லிடையும் சிலிர்க்க
மூடிய விழிகளுக்குள் மோதிடும் மகிழ்வெல்லாம்
சூடிய மல்லிகையின் வாசத்தில் நுரைத்தெழ
நனைந்திட்ட தேகமதும் விரித்திடும் சிறகால்
புனைந்திட்ட காவியமாய் உயிர்த்திடுவாள் இவளே
ஜன்ஸி கபூர்
யாழ்ப்பாணம்
ஏக்கங்கள் வெடித்திடும் ஏழ்மையும் கண்டே/
ஏனி றங்கவில்லை வான்மழையு மிங்கே/
வெடித்திட்ட தரைக்குள்ளே துடித்திடும் வலியும்/
வடித்திட்ட கண்ணீரும் ஈரமில்லா அனலே/
வறட்சி நிலமெல்லாம் கரைந்திட்ட பசுமையால்/
வயிறும் காய்ந்ததே வைரமாய் இடரிங்கே/
வசந்தத்தின் நிழலிங்கே பெருஞ்சுமைக்குள் இளைப்பாற/
வாடிய மனங்களின் தேடலிங்கே மூச்சறுப்பே/
ஜன்ஸி கபூர்