About Me

2020/08/09

மழையில் பூத்த நிலா

தெறித்திட்ட பூமழையில் நனைந்திட்ட நிலவும்

பறித்தெடுத்த இலைக்குள் மறைக்கின்றதே உடலை

சிரித்திடும் கன்னமதில் விரிந்திடும் அழகும்

பூரிக்கின்றதே சிற்பமவள் மெல்லிடையும் சிலிர்க்க


மூடிய விழிகளுக்குள் மோதிடும் மகிழ்வெல்லாம்

சூடிய மல்லிகையின் வாசத்தில்  நுரைத்தெழ

நனைந்திட்ட தேகமதும் விரித்திடும் சிறகால்

புனைந்திட்ட காவியமாய்  உயிர்த்திடுவாள் இவளே


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்  


  •  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!