About Me

2020/08/09

வறட்சிப் பூக்கள்

ஏக்கங்கள் வெடித்திடும் ஏழ்மையும் கண்டே/

ஏனி றங்கவில்லை வான்மழையு மிங்கே/

வெடித்திட்ட தரைக்குள்ளே துடித்திடும் வலியும்/

வடித்திட்ட கண்ணீரும் ஈரமில்லா அனலே/


வறட்சி நிலமெல்லாம் கரைந்திட்ட பசுமையால்/

வயிறும் காய்ந்ததே வைரமாய் இடரிங்கே/

வசந்தத்தின் நிழலிங்கே பெருஞ்சுமைக்குள் இளைப்பாற/

வாடிய மனங்களின் தேடலிங்கே மூச்சறுப்பே/


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!