About Me

2021/04/22

உதிரிப்பூக்கள்

 

வலியின் வலிமையில் வாழ்வது மூட/
வயதின் ஏற்றத்தில்  வனப்பது உதிர/
வாழ்கின்ற வனிதையும் வகுத்திடும் விதியோ/
வழிகின்ற நீரும் வருத்திடும் முதிர்கன்னியென/

உதிரும் நாட்களில் உறைகின்றதே ஆரோக்கியம்/
உன்னத வாழ்வினை உருக்குலைக்கும் தீநுண்ணிகள்/
உருவாக்கும் மரணங்களால் உதிரிப்பூக்களாகத் தேகங்கள்/  
உருவாக்கப்படுகின்ற நவீனத்தால் உறங்குகின்றன உயிர்கள்/

அரும்பிடும் முன்னர் அவலக் கறை/
அணைக்கின்ற காமம் அறுத்திடும் மூச்சை/
அழகிய ஆன்மாவுக்குள் அறைகின்றதே வன்புணர்வை/
அகிம்சை இற்றுப்போக அடைக்கலமாகின்றன சமாதிக்குள்/

வெஞ்சினம் கரைத்தே வெந்நீர் பூசும்/
வெறுக்கும் சமரினில் வெட்டப்படும் தேகங்கள்/
வெறுமை பூமிக்குள் விதைக்கப்படுகின்றன உதிரிகளாகி/
வெல்லுகின்ற வன்முறைகள் வெட்கப்படா கலியுகமிது

ஜன்ஸி கபூர்  

இடைவிடா அடைமழை

 


படர்கின்ற வெயிற் பூக்களை யறுத்திடவே/

இடர் மழையோ யிங்கு வெள்ளமாக/


வீழ்கின்ற துளிகளில் உதிர்ந்தோடும் மலர்களும்/

அவிழ்கின்ற மண் முடிச்சுக்களின் துளைகளும்/

வலியுடன் போராடி கரைந்தோடுகின்றன வலிமையுடன்/


சதைகளைத் துளைக்கும் ஈர வீரியமும்/

விதைக்கின்றதே குளிரினை உணர்வும் சிலிர்க்கின்றதே/


சாலையோரம் நனைந்தே வீசுகின்ற காற்றும்/

சொல்லிடுமோ கலைந்தோடும் கார்மேக இரகசியத்தினை/  

மனசுக்குள் சாரலடிக்கும் மேகவூற்றும் பேரின்பமே/


ஜன்ஸி கபூர்  

சித்திரவதைப் பார்வை



பெண்மைக்குள் தீயூற்றும் கலிகாலம் அணைப்பினிலே/

தாய்மையும் சூடுகின்றதே முட்கிரீடம் உயிரினிலே/

பருவங்கள் கடந்திடாத போதும் கரையேற்றும்/

பாதகங்கள் பாரினிலே அரங்கேற்றும் அவலத்தினை/


படிப்பேற்றாது அடுப்பூதும் அநுபவமதைக் கற்றிடவே/

பாதையினை வகுத்திடுவார் ஏழ்மைக்கும் கருணையில்லை/

இருமனமும் கலக்கின்ற திருமண பந்தத்திலே/

விரும்பிடுவார் சீதனத்தை சிதைந்திடுமே இல்லறமும்/


கொந்தளிக்கின்ற காமத்தினால் வல்லுறுக்கள் வட்டமிட்டே/

கொன்றொழிக்கும் உணர்வினையே வன்புணர்வும் சித்திரவதைக்குள்/

மங்கையராகப் பிறந்தோர் மாதவம் செய்தோரென/

முழங்கிடுவோரும் அறுக்கின்றார் அணங்கின் அடையாளங்களை/


வலிமைக்குள் வலி திணிக்குமிந்த வாழ்க்கை/

வேண்டாமே பாவைக்குள்ளோ சித்திரவதைப் பார்வை/

சிதறுகின்ற கனவுகளைப் பொறுக்குகின்ற விதியது/

அழியட்டும் அன்புக்குள் அவளுலகம் ஆளட்டும்/


ஜன்ஸி கபூர்  

ஆவாரை


ஆவாரையைப் பயன்படுத்துவோர் சாவாரோ நோயினில் 
ஆரோக்கிய வாழ்வினால் நாளெல்லாம் இதமே 

தாவரப் பகுதியெல்லாம் தந்திடுமே மருத்துவத்தை 
ஆதாரமே நமக்கும் பொன்மேனி அழகிற்கு 

நோய்க் கிருமிகள் பாய்ந்தோடும் விரைவாய் 
நோவினைத் தரும் புற்றும் நீங்குமே 

ஆவாரைப் பட்டையில் கெட்டியாகுமே பற்களும் 
ஆஸ்துமாவும் தீர்ந்து போகுமே தேகத்தில் 

மண்ணீரல் பலத்தில் மிரண்டோடும் காய்ச்சல் 
கண் எரிச்சலும் காணாமல் போகுமே 

ஆவாரப் பஞ்சாங்கம் ஆளைப் பலப்படுத்தும் 
ஆவாரப் பூவால் இரத்தமும் சீராகும் 

எக்ஸீமாவும் தாக்காது எழிலுக்கும் குறையிருக்காது 
எல்லோர் தேகத்திலும் கரும்புள்ளிகள் கரையுமே 

வாயுத் துன்பம் தேயும் இலைச்சாறில் 
நோயும் நீங்கி சிறுநீரகமும் சிறப்பாகுமே 

ஆவாரையின் உறுப்பெல்லாம் தேடித்தரும் இதத்தை 
அனுபவிப்போம் நாமும் வீட்டில் பயிரிட்டே 

இலை தண்டு வேர் பூவெல்லாம் 
இரணம் களையும் மூலிகையாய் முகங்காட்டுமே 

நாளின் புத்துயிணர்ச்சியை நயம்படத் தந்திடுமே 
தோலின் வறட்சியை விரட்டியே செழிப்பாக்குமே.

வெம்மையை உறிஞ்சி நிழல் விரித்திடும் 
வெற்றி வாழ்வைப் பற்றும் மருந்திதுவே 

 
ஜன்ஸி கபூர்