About Me

2021/04/22

உதிரிப்பூக்கள்

 

வலியின் வலிமையில் வாழ்வது மூட/
வயதின் ஏற்றத்தில்  வனப்பது உதிர/
வாழ்கின்ற வனிதையும் வகுத்திடும் விதியோ/
வழிகின்ற நீரும் வருத்திடும் முதிர்கன்னியென/

உதிரும் நாட்களில் உறைகின்றதே ஆரோக்கியம்/
உன்னத வாழ்வினை உருக்குலைக்கும் தீநுண்ணிகள்/
உருவாக்கும் மரணங்களால் உதிரிப்பூக்களாகத் தேகங்கள்/  
உருவாக்கப்படுகின்ற நவீனத்தால் உறங்குகின்றன உயிர்கள்/

அரும்பிடும் முன்னர் அவலக் கறை/
அணைக்கின்ற காமம் அறுத்திடும் மூச்சை/
அழகிய ஆன்மாவுக்குள் அறைகின்றதே வன்புணர்வை/
அகிம்சை இற்றுப்போக அடைக்கலமாகின்றன சமாதிக்குள்/

வெஞ்சினம் கரைத்தே வெந்நீர் பூசும்/
வெறுக்கும் சமரினில் வெட்டப்படும் தேகங்கள்/
வெறுமை பூமிக்குள் விதைக்கப்படுகின்றன உதிரிகளாகி/
வெல்லுகின்ற வன்முறைகள் வெட்கப்படா கலியுகமிது

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!