About Me

2021/04/22

ஆவாரை


ஆவாரையைப் பயன்படுத்துவோர் சாவாரோ நோயினில் 
ஆரோக்கிய வாழ்வினால் நாளெல்லாம் இதமே 

தாவரப் பகுதியெல்லாம் தந்திடுமே மருத்துவத்தை 
ஆதாரமே நமக்கும் பொன்மேனி அழகிற்கு 

நோய்க் கிருமிகள் பாய்ந்தோடும் விரைவாய் 
நோவினைத் தரும் புற்றும் நீங்குமே 

ஆவாரைப் பட்டையில் கெட்டியாகுமே பற்களும் 
ஆஸ்துமாவும் தீர்ந்து போகுமே தேகத்தில் 

மண்ணீரல் பலத்தில் மிரண்டோடும் காய்ச்சல் 
கண் எரிச்சலும் காணாமல் போகுமே 

ஆவாரப் பஞ்சாங்கம் ஆளைப் பலப்படுத்தும் 
ஆவாரப் பூவால் இரத்தமும் சீராகும் 

எக்ஸீமாவும் தாக்காது எழிலுக்கும் குறையிருக்காது 
எல்லோர் தேகத்திலும் கரும்புள்ளிகள் கரையுமே 

வாயுத் துன்பம் தேயும் இலைச்சாறில் 
நோயும் நீங்கி சிறுநீரகமும் சிறப்பாகுமே 

ஆவாரையின் உறுப்பெல்லாம் தேடித்தரும் இதத்தை 
அனுபவிப்போம் நாமும் வீட்டில் பயிரிட்டே 

இலை தண்டு வேர் பூவெல்லாம் 
இரணம் களையும் மூலிகையாய் முகங்காட்டுமே 

நாளின் புத்துயிணர்ச்சியை நயம்படத் தந்திடுமே 
தோலின் வறட்சியை விரட்டியே செழிப்பாக்குமே.

வெம்மையை உறிஞ்சி நிழல் விரித்திடும் 
வெற்றி வாழ்வைப் பற்றும் மருந்திதுவே 

 
ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!