About Me

2021/04/22

இடைவிடா அடைமழை

 


படர்கின்ற வெயிற் பூக்களை யறுத்திடவே/

இடர் மழையோ யிங்கு வெள்ளமாக/


வீழ்கின்ற துளிகளில் உதிர்ந்தோடும் மலர்களும்/

அவிழ்கின்ற மண் முடிச்சுக்களின் துளைகளும்/

வலியுடன் போராடி கரைந்தோடுகின்றன வலிமையுடன்/


சதைகளைத் துளைக்கும் ஈர வீரியமும்/

விதைக்கின்றதே குளிரினை உணர்வும் சிலிர்க்கின்றதே/


சாலையோரம் நனைந்தே வீசுகின்ற காற்றும்/

சொல்லிடுமோ கலைந்தோடும் கார்மேக இரகசியத்தினை/  

மனசுக்குள் சாரலடிக்கும் மேகவூற்றும் பேரின்பமே/


ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!