About Me

2012/08/12

திருமறையின் அருள் மொழிகள் சில



இயற்கையின் அற்புதப் படைப்புக்களில் வானமும் பூமியும் அடங்கும். அவற்றிலுள்ள சிருஷ்டிகளைப் பற்றி எம் மனம் ஆராயும் போது வியப்புக்கள் தான் மனதை வளைத்துப் பிடிக்கின்றன. ஆகாயத்திலே தொங்கிக் கொண்டிருக்கும் மிக அதிக எடையுள்ள சூரியனும், சந்திரனும், உடுக்களும், கோள்களும், ஏனைய வான் பொருட்களும் அவற்றின் அமைப்புக்களால் நம்மை வியப்பூட்ட, மறுபுறம் பரந்து நிற்கும் இப் பிரபஞ்சமும் அதனை நிறைத்திருக்கும் உயிரினங்களும், உயிரற்றவைகளும் நம்முள் ஆச்சரியங்களாக மாறுகின்றன.

அல்லாஹ்வின் இச் சிருஷ்டி பற்றி இறக்கப்பட்டுள்ள திருமறை வசனங்களுள் இவையும் சிலவாகும் ...........

"நிச்சயமாக அல்லாஹ்(தான்) வானங்களையும், பூமியையும் உண்மையாக க்கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை (மனிதனே)நீ பார்க்கவில்லையா! அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வந்தும் விடுவான் "        (14:19)


"வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன,இன்னும் முன்னிரவிலும், நடுப்பகலை அடையும் சமயத்திலும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்)   (30:18) 


"ஆகவே, (விசுவாசிகளே) நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருங்கள்"  (30:17)


--------------------------------------------------------------------------------------

"வானவெளியில் (அல்லாஹ்வின் கட்டளைக்குக்) கட்டுப்பட்டவையாக 

( பறந்து செல்லும் ) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா அல்லாஹ்வைத் தவிர ( வேறொரு வரும் ) அவற்றை தடுத்து நிறுத்தவில்லை நிச்சயமாக விசுவாசங் கொண்ட சமூகத்தார்க்கு இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன " (14:79)


"நிச்சயமாக அல்லாஹ்.அவனை வானங்களிலும், பூமியிலும் உள்ளவைகளும் ( தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக பறவைகளும் துதி செய்து கொண்டிருக்கின்றன என்பதை ( நபியே! ) நீ காணவில்லையா! 
( இவற்றில் ) ஒவ்வொன்றும் தன் தொழுகையையும் , அவனைத் துதி செய்யும் முறையையும் திட்டமாக அறிந்திருக்கின்றன. மேலும் அல்லாஹ் இவைகள் செய்பவற்றை நன்கறிந்தவன்" (24:41)

---------------------------------------------------------------------------------------

மேலும், மலைகளிலும், மரங்களிலும் அவர்கள் கட்டுபவைகளிலும் நீ கூடுகளை அமைத்துக்கொள்" என்று உமதிரட்சகன் தேனீக்களுக்கு உள்ளுணர்ச்சிகளை உண்டாக்கினான் .  (16:68)


---------------------------------------------------------------------------------------

"பேரீச்சை, திராட்சை (ஆகிய) பழங்களிலிருந்து மதுவையும், அழகான உணவையும் நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள் , நிச்சயமாக இதிலும் அறிகின்ற கூட்டத்தினருக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது"     (16:68)


------------------------------------------------------------------------------------------

"பின்னர், நீ எல்லா விதமான கனி(யின் மலர்) களிலிருந்தும் உணவருந்த பின்னர், உனதிரட்சகனின் வழிகளில் ( அவை உனக்கு ) எளிதாக்கப்பட்டதாக இருக்கச் செல்"  ( எனவும் உணர்வை உமதிரட்சகன் உண்டாக்கினான் ) 
இதனால்  அதன்  வயிறுகளிலிருந்து  (தேனாகிய)  ஒருபானம் வெளியாகின்றது. அதன் நிறங்கள் மாறுபட்டவையாகும். அதில் மனிதர்களுக்கு  குணப்படுத்தலுண்டு.  நிச்சயமாக,  இதிலும் சிந்திக்கக்கூடிய கூட்டத்தினருக்கு  ஒரு அத்தாட்சி  இருக்கின்றது"  (16:69)







No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!