About Me

2015/02/24

வாழ்வே மாயம்


வாழ்க்கை !

கடந்துபோன வாழ்க்கைய கிளறிப் பார்ப்பது  தப்புத்தான். ஏன் என்றால்  அதில்  நம் நிம்மதி கரைந்து  போன வடுக்கள் இருக்கும். அவை வலிக்கும். ஆனாலும் சில விசயங்கள நினைத்துப்  பார்க்கும் போதுதான் அது நம் வலிகளை  காய வைத்து  பக்குவப்படுத்தி எதிர்காலத்திற்கு தயார்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில இன்னைக்கு நான் நெனைக்கப் போறது என்னோட வாப்பாவ . அவர நெனைச்சு அவர்ட தெறமைகளை கண்டு நான் மலைச்சுப் போயிருக்கிறேன். என்னதான் தெரியாது அவருக்கு. ஓவியம், இலக்கியம் உட்பட எல்லா உபகரணத் திருத்த வேலைகளும்  அவர் பேசுற ஆங்கிலத்திற்கு நிகரே இல்ல. படித்தவர். அரசாங்க ஊழியர். எங்கள எல்லாம் படிக்க வச்சார். தன்னோட சம்பளத்துக்குள்ள  வட்டம் வரைஞ்சி  அதுக்குள்ள எங்களையும் உள்ளீர்த்துக் கொண்டார். அந்த உள்ளீர்ப்பு எங்க அம்மாட தெறமை அவருக்கேத்த வாழ்க்கை. அதுக்கு எங்களயும் பழக்கப்படுத்தி.

என்னோட சின்னக் கால வாழ்க்கய நெனைச்சா அவர்கிட்ட நெறைய அடி வாங்கியிருக்கிறேன். றோட்டுல விரட்டி விரட்டி செம்பரத்தை தடி பிய்ச்சி விளாசியிருக்கிறார்.  அப்படி அடிச்சு வார காயத்தில இருந்து ரெத்தம் வந்தா க கோபம் போனதும் அந்த கல்லுக்குள்ள கொஞ்சம் ஈரம் கசியும். மருந்து கட்டுவார். ஏதாவது தின்ன வாங்கி தருவார் அடிச்சதுக்கு இலஞ்சமா.

அவர் சிங்கம். தனிக்காட்டு ராஜா. யாருக்கும் கட்டுப்படாத அஞ்சா நெஞ்சன். ஆனால் அவரச் சூழ யாருமற்ற ஒரு மயானம் உருவாகியிருப்பதைக்கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Ms. Jancy Caffoor -
   24.02.2015

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!