About Me

2020/08/19

குறிஞ்சி மலரே

 

குறிஞ்சி மலரின் தாய்மடியோ மலையும்/

மலையும் கலை வடிக்கும் பெருமிதத்தில்/

பெருமிதத்தில் குறிஞ்சித் திணை காவியமாகும்/

காவியமாகும் நீலகிரியும் பேரழகு மலர்களால்/


மலர்களால் காதலில் அலையும் தேனீக்களும்/

தேனீக்களும் சுமந்திடும் தேனையும் ருசித்தேன்/

ருசித்தேன் நானும் மலர்களின் வண்ணங்களை/

வண்ணங்களை ரசிக்கையில் மனதும் பரவசத்தில்/


பரவசத்தில் விழிகளும் ஏங்கிடுதே வருகைக்கு/

வருகைக்கு காத்திருப்பேனோ ஈராறு வருடங்கள்/

வருடங்கள் நீள்கையில் தவிப்பும் துடிப்போடு/

துடிப்போடு காத்திருக்கிறேன் மலர்ச்சியினில் குறிஞ்சி/


ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!