About Me

2020/08/16

சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்

வரங்களாய் பெற்றிட்ட வனங்கள் யாவுமே/

மரங்களைக் காத்தே மண்வளம் உயர்த்திடும்/

இறந்திட்ட இலைகளும் இயற்கையைக் காத்திட/

பறந்திடும் மாசும் பசுமையும் உயிர்க்கும்; /

சுற்றுச் சூழலும் சுகமுறும்/

பெற்றிடும் நன்மை பெருமிதமும் நமக்கே /


ஜன்ஸி கபூர்  

 

---------------------------------------------------------------------

சுற்றுச் சூழல் சுத்தம் பேணுவோம்/

தொற்றும் மாசும் தொற்றிடா திருக்க/

வரங்கள் நமக்கு வந்தூற்றும் மழை/

மரங்கள் வளர்த்து மண்ணைக் காப்போம்/

சுற்றம் வாழும் சுகமாக/

பற்றுடன் இசைந்து பசுமை வளர்ப்போமே/




 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!