About Me

2020/08/17

எனை மீட்டும் காதலே

 சலனப்படாத இரவின் மடியும் உயிர்க்கிறது

சந்தோஷம் பிழிந்தூற்றும் உந்தன் அன்பினாலே

சத்தம் மொழியாத விழித் துடிப்புக்குள்ளே

முத்தம் மறைக்கிறாய் முழுதாய் நனைகிறேன்


வெட்க மடிப்புக்குள் உனைச் சுற்றியே

கட்டியணைக்கிறாய் காதலும் சுவையில் மயங்கவே 

சிட்டின் சிறைக்குள்ளே உயிர்த்திடும் மெட்டுக்குள்ளே

தொட்டுக் கொள்ளவா தொடர்ந்திடவா உனக்குள்


கருவிழி ஜாடையினில்  கலந்திட்ட நிழலே

பருவத்தின் எழிலில் நினைவுகள் மோதிட

இரு உயிர்களும் துடிக்குதடி மௌனத்தில்

அருகினில் நீயென்றால் ஆயுளும் நீளுமடி


எனை மீட்டும் காதலே வா

ஏங்க வைத்தே அருட்டுகின்றாய் உணர்வுகளை

மங்காத அன்போடு வாழ்வுக்குள் நாமிணைய

தூங்காமல் காத்திருக்கிறேன் இசையாகி வந்துவிடு


ஜன்ஸி கபூர் 

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!