About Me

2021/05/15

To Build a Fire

 Jack London எழுதிய  To Build a Fire  எனும் ஆங்கிலக் கதை நிகழ்வினை எனது  பார்வையில் சுருக்கமாக இவ்வாறாக வடிவமைத்துள்ளேன்.

டு பில்ட் எ ஃபயர்' என்பது அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் சிறுகதை. இந்த கதையின் இரண்டு பதிப்புகள் உள்ளன. முதல் பதிப்பு 1902 இலும் மற்றொன்று 1908 இலும் வெளியிடப்பட்டன.  இக் கதை 1908 ஆம் ஆண்டுக்குரியது

------------------------------------------------------------------- 

பெயரிடப்படாத ஆண் கதாநாயகன் யூகோன் பிராந்தியத்தின் சப்ஜெரோ போரியல் காட்டில் இறங்குகிறார். அவரை தொடர்ந்து வருகின்ற ஒரு பூர்வீக நாய் நண்பர்களைப் பார்ப்பதற்காக அப் பாதையில் செல்கிறது.   சல்பர் க்ரீக்கிலிருந்து ஒரு வயதான மனிதரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து  கடுமையான குளிரில் தனியாக நடைபயணம் மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இக்கதை விளக்குகின்றது ஈற்றில்  கதாநாயகன் மரணத்திற்குள் உறைகிறார்.

தொடர்ந்து வாசியுங்கள் 💓💓💓💓💓💓 

------------------------------------------------------------------ 

 பகல் நேரம், சாம்பல் பூத்து அதிக குளிரால் நிரம்பியிருந்தது.

அந்த பெயரிடப்படாத மனிதர் பிரதான யூகோன் பாதையிலிருந்து விலகி, யூகோன் ஆற்றின் எல்லையில் உள்ள காடுகளின் வழியாக,  வெப்பநிலை −75 ° F (−59 ° C) ஆக உள்ள  நிலைமைகளில் எச்சரிக்கைகளை புறக்கணித்து ஒரு பெரிய உமி  நாயுடன் பயணித்தார். 

 மங்கலான சிறிய பாதையொன்று கிழக்கு நோக்கியதாகக் காணப்பட்டது. உயரமான தரைப் பகுதியில் ஏறினார். அதிகம் மேலே ஏறியதில் மூச்சு வாங்கியது. 

தனது கடிகாரத்தைப் பார்த்தார்.

நேரம் 9 ஐக் காட்டியது.

மேகங்கள் காணப்படாத தெளிவான வானில் சூரியன் காணப்படாமையினால் சற்று இருளாகக் காணப்பட்டது. அந்த நுட்பமான இருள் அவருக்குப் பழக்கப்படாதது.

யூகோன் பாதை பனித்துகள்களால் நிரம்பியிருந்தது. வெள்ளைத் துகள்களின் மத்தியில் கூந்தலைப் போன்று அந்த வீதி தென்பட்டது. அந்தப் பயணப் பாதையின் முடிவில் ஏதோ ஒரு வெளிச்சப் பகுதி இருக்க வேண்டுமென அவரின் உள்ளுணர்வு சொல்லியது. அந்த ஒளிப்பகுதி காணப்படுகின்ற தீவை அடைய இன்னும் சிறு தூரம் ஏற வேண்டியிருந்தது.

சூரியனைக் காணாத இந்தக் குளிர் அவருக்குப் புதிது என்பதால் பூஜ்ஜியத்திற்கு கீழான ஐம்பது பாகை உறைபனி அவருக்கு சங்கடமாக இருந்தது. அது கையுறைகள், காது-மடிப்புகள், சூடான மொக்கசின்கள் மற்றும் அடர்த்தியான சாக்ஸ் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட வேண்டும்.  அது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. பனிக்குள் துப்பினார். அது காற்றில் வெடித்தது. அதனைப் பார்த்து திடுக்கிட்டார்.

உண்மையில் வெப்பம் அல்லது குளிரின் குறித்த வரையறைக்குள் வாழ வேண்டுமென்ற வறையறை மனிதனின் பலகீனமாகவே காணப்படுகின்றது.  

அவர் கைக்குட்டையில் போர்த்தப்பட்ட மதிய உணவைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை. 

அவர் ஆறு மணிக்கு முகாமுக்கு வருவார்.  அங்கே சிறுவர்கள் இருப்பார்கள், சூடான இரவு, உணவு நெருப்புக் கோளத்தின் மத்தியில் தயாராக இருக்கும்.என நினைத்தார்.  

அவரின் குதிகால்கள் சோர்ந்தன. உறைபனியின் தாக்கத்தினைக் குறைக்க கன்ன எலும்புகளை கைகளால் நன்றாகத் தேய்த்து உஷ்ணமூட்டினார். 

ஒளியைக் காணாத, நீண்ட பயணம்   இனம்புரியாத புதிய அனுபவமாகவே இருந்தது. இருந்தும் பயமும் படர்ந்தது. அந்த இருளின் குளிர்மைக்குள் மனம் நெருப்பை விரும்பியது. 

அவருடன் பயணப்பட்ட நாயும் சோர்வடைந்தது. அச்சுறுத்தலான பயத்தை அனுபவித்தது. நாய்  நெருப்பை விரும்பியது. இல்லையெனில் பனியின் கீழ் புதைத்து அதன் வெப்பத்தை காற்றிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அதன் சுவாசத்தின் உறைந்த ஈரப்பதம், அதன் ரோமங்களில் உறைபனி      குடியேறியது. அதன் முகவாய் மற்றும் கண்கள் அதன் சுவாசத்தால் வெண்மையாக்கப்பட்டன.

நாய்க்கு தெர்மோமீட்டர்கள் பற்றி எதுவும் தெரியாது. அதன் மூளையில் மனிதனின் மூளையில் இருப்பது போன்ற மிகக் குளிரான நிலை குறித்த கூர்மையான உணர்வு இல்லை. ஆனால் கடுமையான குளிரின் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கின்ற உள்ளுணர்வு இருந்தது. இத்தகைய பயமுறுத்தும் குளிரில் வெளிநாடு செல்வது நல்லதல்ல என்று   அறிந்திருந்தும்,  தன் நண்பர்களைச் சந்திக்க  தயக்கமின்றி நாய்   பின்தொடர்ந்து சென்றது.

அவரது   செந்நிறத் தாடிக்குள் பனித்துகள்கள் அப்பியிருந்தன. அவரது வாய் புகையிலையை மென்று கொண்டிருந்தது. 

நாய்க்கும் மனிதனுக்கும் இடையே மிகுந்த நெருக்கம் இருந்தது. அவர் நாயுடன் நீரோடை வழியாக நகர்ந்தார்.

இப்போது மணி பத்து.

அவர் செல்லவேண்டிய ஊருக்குப் போக இன்னும் பத்து கிலோ மீற்றரே காணப்பட்டது. அவர் பன்னிரண்டு மணிக்கு முட்கரண்டிக்கு வருவார் என்று கணக்கிட்டார். அவர் தனது மதிய உணவை அங்கே சாப்பிட முடிவு செய்தார்.

 அன்று மாலை ஆறு மணியளவில் தங்கள் முகாமில் வருங்காலக் குழுவை  ('சிறுவர்கள்') அடைவதே அவரது குறிக்கோள். 

ஆறு மணிக்கு அவர் சிறுவர்களுடன் முகாமில் இருப்பார் என்பதைத் தவிர வேறு எதுவும் யோசிக்கவில்லை. பேச யாரும் இல்லை. இருந்திருந்தாலும்  அவரது வாயில் பனி முகவாய் இருப்பதால் பேச்சு சாத்தியமில்லை. அந்த ஆர்க்டிக் குளிர்காலத்தில் எந்த ஒரு சிற்றோடையிலும் தண்ணீர் இருக்க முடியாது. ஆனால் மலைப்பகுதிகளில் இருந்து குமிழ்ந்து, பனியின் அடியில் மற்றும் பனியின் மேல் ஓடும் நீரூற்றுகள் உள்ளன என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

உறைந்த சிற்றோடையின் போக்கை அவர்கள் பின்பற்றும்போது, ​​பனியால் மறைக்கப்பட்ட மெல்லிய பனியின் திட்டுகளைத் தவிர்க்க கவனமாக இருந்தார். 

அப்பனி அவரின் காலின் தோலை வெடிக்கச் செய்தது. காலை நீரோடையில் நனைத்து ஈரப்படுத்த நினைத்தார். ஆனால் அது பயணத்தைத் தாமதிக்கும் என்பதால் தயங்கினார். அவரின் இப்போதைய தேவை நெருப்பின் அருகாமையில் குளிர் காய்வதுதான். 

வழக்கமாக மறைக்கப்பட்ட குளங்களுக்கு மேலே பனி,  ஒரு மூழ்கிய  மிட்டாய் தோற்றத்தைக் கொண்டிருந்தது. அது ஆபத்தை விளம்பரப்படுத்தியது. 

நேரம் இப்போது பன்னிரெண்டு மணி

சூரியன் வெகு தொலைவில் இருந்தது. 

கை, கால் விரல்கள் விறைத்தன. உணர்விழந்த நிலை. மதிய உணவை உண்ண முயற்சித்தார். ஆனால் கையை வாயிற்கு கிட்டே கொண்டு செல்ல முடியவில்லை.

நெருப்பைப் பற்றாமல் மதிய உணவு உட்கொள்ள முயன்ற தனது முட்டாள்தனத்தை நினைத்துக் கொண்டார். 

அரை மணி நேரத்தில், ஒரு மரத்தின் கீழ் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றியுள்ள தூரிகைக் குவியலிலிருந்து கிளைகளை இழுத்து தீப்பிழம்புகளுக்கு உணவளிதார். 

நெருப்பை மூட்டிய போது, உடலும் உள்ளமும் திருப்தியடைந்தது. தனது கையுறைகளை நீக்கியும் தொப்பியைக் கழற்றி காது மடிப்புக்களை வெளியே இழுத்தும் நன்றாக உஷ்ணமுட்டியபோது மனம் சந்தோசப்பட்டது. நாய் நெருப்பில் திருப்தி அடைந்தது. 

இந்த செயலின்  இறுதியில் கிளைகளில் இருந்து ஒரு பெரிய பனி கீழே விழுந்து தீயை அணைக்க காரணமாகியது. 

பின்னர் மீள புகையிலையை மென்றவாறு பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் பனி அவரின் பயணத்தை தடைப்படுத்தவில்லை. உரிய நேரத்திற்கு சென்றடையலாம் எண்ணிப் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஈரமான சுவாசமும், பனித்துகள்களால் மூடப்பட்ட வெண்ணிற மீசையும் அவரைச் சங்கடப்படுத்தியது. திடீரென முழங்கால்கள் பனிக்குள் அமிழத் தொடங்கின. விரைவாக  உணர்வை இழக்கத் தொடங்கி, கடுமையான குளிரால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து பற்றிய எச்சரிக்கைகளைப் புரிந்து கொண்டார். 

இப்போது பூஜ்ஜியத்துக்கு கீழே வெப்பநிலை எழுபது. ஆத்திரப்பட்டார். தனது அதிஷ்டத்தை எண்ணிக் கவலைப்பட்டார். தன்னைச் சூழ்கின்ற ஆபத்தினையும் உணர்ந்தார். 

விரைவாகவும் அதே நேரம் பொறுமையாகவும் நிதானமாகவும் இயங்கினார்.

ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படப் போகின்றதே. எப்படியாவது மீண்டும் நெருப்பை மூட்டி குளிர் காய வேண்டும்.

மற்றொரு நெருப்பை எரிக்க,  சுற்றும் முற்றும் நோக்கினார். அருகில் கிடந்த உலர்ந்த மரக்கிளைகள், தடிகளைக் கொண்டு தீமூட்டியபோது அச்சுடர் ஒளிர்ந்தது. 

அவரின் கால்கள் ஈரமாக இருந்தன.  பனிக்குள் கால்கள் ஒட்டிக் கொள்ளுமே. உறைபனிக்குள் விரைவாக ஓடமுடியாது. மனம் பலவற்றை நினைத்துக் கவலைப்பட்டது.

 மீண்டும் தீமூட்ட வேண்டும். மனம் பரபரத்தது. கைகளில் உணர்வின்மை காரணமாக தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.  

ஆபத்தான இவ்வாறான பயணங்களுக்கு தனியே செல்வது தவறு என்பதை உணர்ந்தார். 

மற்றொரு நெருப்பைத் தொடங்க எந்த வழியும் இல்லாமல், நாயைக் கொன்று அதன் உடல் வெப்பத்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தார்.  

ஆனால் ...........

அவர் கைகள் மிகவும் கடினமானவை. அவரால் விலங்கின் கழுத்தை நெரிக்கவோ அல்லது தொண்டையை வெட்ட கத்தியை எடுக்கவோ முடியாது. இறுதியாக, அவர் முகாமை நோக்கி ஓடுவதன் மூலம் தனது சுழற்சியை மீட்டெடுக்க முயற்சித்தார். 

ஆனால் தடுமாறி பனியில் பல முறை விழுந்தார்.

இந்தப் பனிப் போராட்டத்தினிடையில் தொலைவில் சிறு புள்ளியாகத் தெரிந்தது அவர் செல்ல வேண்டிய பயணப்பாதை. 

ஆனால் குளிர் படிப்படியாக அவரின் மையப்பகுதியை உறைய வைத்தது.   கை, கால்கள் விறைத்தன. தரையின் தொடர்பறுந்த நிலை. உணர்ச்சியற்றுப் போனது உடல். இதயம் தனது துடிப்பினை இழந்து பலம் குன்றிப் போன பிரமை. 

 இறுதியில் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துவிடுகிறார் . 

முகாமில் உணவு மற்றும் தங்குமிடம் கண்டுபிடிக்க நாய் இருட்டிற்குப் பிறகு உடலை விட்டு வெளியேறுகிறது.

அவர் தனது உடலைக் காணும்போது 'சிறுவர்களுடன்' நிற்பதை கற்பனை செய்கிறார்.

இவ்வாறாக நீண்டு செல்கின்றது இக்கதை. வித்தியாசமான நகர்வோட்டம். பனிப் பயணப்பாதையில் ஏற்பட்ட சிரமங்கள் இங்கே உயிரோட்டம் பெறுகின்றன.  

To Build a Fire எனும் ஆங்கில கதையினை வாசித்தால் எழுத்தாளரின் முழுமையான உணர்வின் விம்பங்களை நீங்களும் ரசிக்க முடியும்.

ஆங்கிலக் கதைகளில் வித்தியாசமான சுவையொன்று இருப்பதை உணர முடிகின்றது. வாசிப்பின் அனுபவங்கள் அதிகரிக்கின்றபோது நாமும் தரமான ஆக்கங்களைப் படைக்க முடிகின்றது.

ஜன்ஸி கபூர் - 15.5.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!