விடியல் போராட்டங்கள் உணர்வுகளின் ஒலியே/
துடித்திடுமே இதயங்களும் மௌனத்து வலியில்/
மடிகின்ற மனிதங்களை உயிர்ப்பிக்கும் ஆயுதமாய்/
படிகின்றதே வாழ்வுக்குள்ளும் விடுதலை வெற்றி/
ஜன்ஸி கபூர்
விடியல் போராட்டங்கள் உணர்வுகளின் ஒலியே/
துடித்திடுமே இதயங்களும் மௌனத்து வலியில்/
மடிகின்ற மனிதங்களை உயிர்ப்பிக்கும் ஆயுதமாய்/
படிகின்றதே வாழ்வுக்குள்ளும் விடுதலை வெற்றி/
ஜன்ஸி கபூர்
சிற்பமொன்று உயிர்த்திடவே சிறகடித்தேன் கனவுக்குள்ளே/
அற்புத ஒளியவளோ உணர்வெல்லாம் மோட்சத்தினில்/
விழியசைத்தாள் நனைந்ததுவே என்னுயிரும் ஏக்கத்தினில்/
அழகியவள் கரமிணைத்தேன் மயக்கத்தினை மொழிபெயர்த்தாள்/
கன்னத்தில் கசிகின்ற வெட்கத்தின் வெடிப்புக்களை/
சுவைக்கின்றேன் களவாக சொப்பனத்தில் அவளிதழ்கள்/
உளமேந்தும் காதலுமே பிணைந்திடும் நேரந்தனில்/
உறைகிறாள் மௌனத்தினில் ரசிக்கின்றேன் நானுமவளை/
ஜன்ஸி கபூர் - 12.08.2020
யாழ்ப்பாணம்
மூங்கில் இலைகளோ காற்றின் கைகள்/
கைகள் வருடுகையில் உயிர்த்திடுமே புல்லாங்குழல்/
புல்லாங்குழல் துளைதனை முத்தமிடும் தென்றலே/
தென்றலே காதோரம் இசைக்கின்றாய் கீதத்தினை/
கீதத்தினை கேட்கையில் மேகங்களும் துள்ளிடுமே/
துள்ளிடுமே உள்ளங்களும் தூறல்களில் நனைந்து/
நனைந்து சிலிர்த்திடுமே நுரைத்திடும் நீரோடையும்/
நீரோடை அசைவினில் விழிகளுக்கும் பேரின்பமே/
பேரின்பமே நமக்கும் இயற்கையின் அழகு/
அழகு வேண்டுமே மாந்தர் இதயத்திலே/
இதயத்திலே நிழலாடும் நினைவுகளும் சுகமாக/
சுகமாக வாழ்ந்திடத்தானே நமக்கிருக்கு மூங்கில்/
ஜன்ஸி கபூர் - 12.08.2020
செந்தமிழ் பிழிந்தூற்ற இலக்கணமும் யாப்பேற்றும்/
வந்தமர் சந்தனமாய் இலக்கியமும் நறுமணத்தில்/
சிந்தைக்குள் அலைகின்ற வாழ்வியல் தொகுப்பெல்லாம்/
வந்தமருமே சொற்களும் கசிந்தோடும் கற்பனைக்குள்/
கற்றோர் கல்லாதோர் கனிந்திடுவார் சுவைக்கையிலே/
காத்திடுவோம் உதிராமல் இலக்கியப்பூக்களை உயிர்ப்புடனே/
ஜன்ஸி கபூர் - 12.08.2020