About Me

2020/08/13

மயக்கமென்ன மௌனமென்ன

சிற்பமொன்று உயிர்த்திடவே சிறகடித்தேன் கனவுக்குள்ளே/

அற்புத ஒளியவளோ உணர்வெல்லாம் மோட்சத்தினில்/

விழியசைத்தாள் நனைந்ததுவே என்னுயிரும் ஏக்கத்தினில்/

அழகியவள் கரமிணைத்தேன் மயக்கத்தினை மொழிபெயர்த்தாள்/


கன்னத்தில் கசிகின்ற வெட்கத்தின் வெடிப்புக்களை/

சுவைக்கின்றேன் களவாக சொப்பனத்தில்  அவளிதழ்கள்/

உளமேந்தும் காதலுமே பிணைந்திடும் நேரந்தனில்/

உறைகிறாள் மௌனத்தினில் ரசிக்கின்றேன் நானுமவளை/


ஜன்ஸி கபூர் - 12.08.2020

யாழ்ப்பாணம்


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!