About Me

2020/08/13

மூங்கில் காடுகளே

மூங்கில் இலைகளோ காற்றின் கைகள்/

கைகள் வருடுகையில் உயிர்த்திடுமே புல்லாங்குழல்/

புல்லாங்குழல் துளைதனை முத்தமிடும் தென்றலே/

தென்றலே காதோரம் இசைக்கின்றாய் கீதத்தினை/


கீதத்தினை கேட்கையில் மேகங்களும் துள்ளிடுமே/

துள்ளிடுமே உள்ளங்களும் தூறல்களில் நனைந்து/

நனைந்து சிலிர்த்திடுமே நுரைத்திடும் நீரோடையும்/

நீரோடை அசைவினில்  விழிகளுக்கும் பேரின்பமே/


பேரின்பமே  நமக்கும் இயற்கையின் அழகு/

அழகு வேண்டுமே மாந்தர் இதயத்திலே/

இதயத்திலே நிழலாடும் நினைவுகளும் சுகமாக/

சுகமாக வாழ்ந்திடத்தானே நமக்கிருக்கு மூங்கில்/

ஜன்ஸி கபூர் - 12.08.2020




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!