About Me

2020/10/02

பூக்கள் விடும் கண்ணீர்

 

இயற்கை மடியினில் தவழ்கின்ற பூக்களின்

இறகினைக் கொய்திடுவார் இதயம் அற்றோர்

பசுமைக்குள் தீயினை ஊற்றும் மாந்தர்

பறித்திடுவார் மகரந்த உயிர்ப்பினைப் பாரினில்

சூழல் மாசுக்குள் ஊறிடும் மலர்கள்

சூடுதே கண்ணீரை தன் அழிவுக்காக


ஜன்ஸி கபூர் - 02.10.2020

-----------------------------------------------------------------------

2. உறவுகளோடு உரையாடுவோம்

---------------------------------------------------------

இதயத்தின் உணர்வுகள் உதயமாகும் உறவினில்/

இன்பமும் படர்ந்திடும் இன்னலைத் துரத்தியே/


இயந்திர மொழியினில்  வேண்டாமே தனிமையும்/

இழைந்தோடித் தழுவட்டும் அன்பான சொல்லாடல்/


பேசிடும் வார்த்தைகள் நீக்குமே பேதத்தை/

பேணுவோம் உறவுகளை மகிழ்ந்திடலாம் உரையாடி/


ஜன்ஸி கபூர் - 07.10.2020


-------------------------------------------------------------------
3. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் அனுபவம்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020

---------------------------------------------------------
4. தமிழை அரங்கேற்று தமிழா
----------------------------------------------------
நாவும் மொழிந்திடும் இனிமைத் தமிழை/
நானிலம் போற்ற அரங்கேற்று தமிழா/

சுருங்கிடும் உலகின் உணர்வின் வழியாக/
வருங்காலம் ஏந்தவே செதுக்கிடுவோம் அழகாக/

தாய்மையை மதிக்கும் பண்பாட்டின் சுவடாய்/
வாயும் உதிர்க்கட்டும் செந்தமிழைத் தினமும்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020



----------------------------------------------------------------------- 

5. கனவிலும் கவி பாடு
--------------------------------- 
கனவிலும் கவி பாடு நிதமும்/
கற்பனைச் சுவையுடன் யதார்த்தமும் பிசைந்தே/

சொற்களை அழகில் கோர்த்தே தினம்/
வடித்திடு கவிதனை வனப்பை ரசித்திடு/

தூரிகை நீயேந்தி துடித்திடும் உணர்வால்/
உயிர்த்திடு உலகமும் விரும்பிச் சுவைத்திட/

ஜன்ஸி கபூர் - 13.10.2020


------------------------------------------------------------------------------------- 
6. தாயே தெய்வம்
------------------------------
பத்துத் திங்கள்  பக்குவம் காத்து/
பண்பான வாழ்வுதனைக் கற்றும் தந்து/

பாசம்தனை தினமும் உறவிலே கோர்த்து/
உயிரினைப் போர்வையாக்கி 
 உள்ளத்தைத் தொட்டிலாக்கி/

உணர்வுக்குள் வலியினை மெல்ல உறிஞ்சும்/
உன்னத தாயே அன்பின் தெய்வம்/

ஜன்ஸி கபூர் - 15.10.2020

------------------------------------------------------------- 
7. வானம் எழுதிய கவிதை
-----------------------------------------
வெம்மையும் கிழித்ததே
.......... தரையினில் கோடுகள்/
வெந்ததே வாழ்வும்
.......... பஞ்சத்தின் கோரத்தில்/
புண்பட்ட மனங்களில்
........... இன்பத்தினை வார்க்கவே/
விண்ணெங்கும் பூத்ததே
............ கார்மேகப் பூக்களும்/
எண்ணமும் சிலிர்த்திட
.......... பொழிந்ததே பூமழை/
இரசித்தேனே நானும்
........... மழைக் கவிதையை /

ஜன்ஸி கபூர் - 16.10.2020


--------------------------------------------------------------------------------- 
8. பிணைத்திடும் வாழ்க்கை இணைந்திடும் இறுதிவரை

ஜன்ஸி கபூர் - 20.10.2020


--------------------------------------------------------------------------- 

9. ஓயாத மரணங்கள்
---------------------------------
மரணச் சுழற்சிக்குள்
..........மண்டியிடுகின்றன உயிர்கள்/
பிணிக்குள் தேகம்
.........பிணைக்கின்றதே இழப்புக்களில்/

விபத்தும் அனர்த்தமென்றும்
...........விளையாடுகின்றதே விதியும்/
கொலையும் தற்கொலையும்
..........கொல்கின்றதே நேயத்தினையும்/

கலப்பட உணவும்
..........கலக்கமே ஆரோக்கியத்திற்கே/
ஓலமிடும் இறப்புக்கள்
...........ஓயாது தொடர்கின்றனவே/

ஜன்ஸி கபூர் - 21.10.2020

  

--------------------------------------------------------- 
10. நிம்மதி தேடும் மனிதர்கள்
------------------------------------------------
சுருங்குகின்ற வாழ்வில் 
.......விருப்பங்களோ மலைபோல்/
சுகமிழக்கும் உழைப்பு 
.......சுமையோ உடலுக்கே/

உலக மாற்றங்கள் 
.......சுழற்றும் தேவைகள்/
உணர்வுகளுக்கு வலியே 
......உளத்திற்கேது அமைதி/

நவீனத் தேடலின் 
.......நாகரிக வாழ்க்கையில்/
நனைந்திடத் துடிக்கையில் 
......நிம்மதியும் தொலைகிறதே/

ஜன்ஸி கபூர் - 26.10.2020

  
-----------------------------------------------------------
 
11.கொஞ்சும் காதல்
-------------------------------
நெஞ்சத்து அன்பில் கொஞ்சும் காதல்/
அஞ்சாதே வாழ ஆருயிர் தழுவி/
ஆசைகள் வருடும் கனவின் விரல்களை/
அணைக்கின்றேன் தினமும் இனிக்கின்றாய் நினைவாக/

எனை ரசித்தே நீயிடும் திரை/
எழில் வதனம் மையிடும் நாணமாக/ 
கட்டிக்கரும்பே உன்றன் புன்னகையும் அமிர்தமே/
வெட்கப்படும் கண்கள் மின்னுதே மின்னலாக/
 
உணர்வுகள் துடிக்கின்ற இளமைப் பருவம்/
உறவாக்க நினைக்குதே மெய்க்காதல் பண்பினாலே/  

ஜன்ஸி கபூர் - 27.10.2020



--------------------------------------------------------------- 
12.கவிதைக்கு உயிர் கொடுப்போம்
-----------------------------------------------------------
விழிகள் காணுகின்ற  
........யதார்த்தங்களை இணைத்தே/
அழகான எண்ணங்களை 
.......அதில்ப் பிசைந்து/

வழிகின்ற கற்பனைகளால் 
.......அழகினைக் கோர்த்து/
வடிக்கின்ற கருவை 
........உயிர்க்குமே விரல்கள்/

பிறந்திடும் கவியும் 
.......பறந்திடும் உலகில்/
சிறந்த வாழ்வின் 
.......பிம்பமாகி வருடுமே/

ஜன்ஸி கபூர் - 27.10.2020




------------------------------------------------------------------------------------------
13.சோகமான சுமைகள்
-------------------------------------
உருளும் வாழ்வில் 
........உறவுகளின் இழப்புக்கள்/
உணர்வின் வலியே 
.......உள்ளத்தின் சுமையாகும்/

கொரோனாத் தொற்றும் 
........கொல்லுதே வாழ்வை/
கொடூர வறுமையின் 
.........கொடுமையும் தாக்குதே/

வாழ்க்கைப் போராட்டங்கள் 
........சந்திக்கும் சுமைகள்/
விரட்டாதே சோகங்களை 
.......நீளுகின்ற பொழுதுகளில்/

ஜன்ஸி கபூர் - 28.10.2020




--------------------------------------------------------------------------------------------------
14. இணைக்கும் உறவுகள்
----------------------------------------
அணைப்பார் பெற்றவர்
............அன்பால் உவந்தே/
பிணைப்பார் கரங்களை
...........உடன்பிறந்தோரும் கனிந்து/
துணைக்கும் வருவார்
...........நட்பினரும் நிழல்போல்/
பிணக்கும் கொள்ளா
...........சுற்றமும் ஊரும்/
முரண்களைக் கலைத்தே
............தாங்கிடுவார் தூண்களாகி/
இணைக்கும் உறவுகளால்
............இனித்திடுமே வாழ்வும்/

ஜன்ஸி கபூர் - 29.10.2020 

--------------------------------------------- 
15. வீழ்ந்தாலும் கலங்காதே 
------------------------------------------- 
வீழ்ந்தாலும் கலங்காதே  
..........விதியென்றே நினைக்காதே/
வீழ்கின்ற பொழுதெல்லாம் 
..........எழுதலே உந்தலாம்/

வாழ்க்கைத் தளத்தில் 
...........ஏற்றமும் இறக்கமும்/
வாழ்வியல் நெறிதானே 
.........உணர்ந்தவர் வென்றிடுவார்/

வீழ்கின்ற பொழுதெல்லாம் 
.........ஊக்கமே உயர்வாம்/
எழுந்திடும் முயற்சியே 
.........ஏற்றத்தின் சுவடாம்/
 
ஜன்ஸி கபூர் - 30.10.2020









நிலாமுற்றக் கவிதைகள்

வாய்மையே வெல்லும்

வாய்மை கொண்டார் வெல்வார் வாழ்வில்/

பொய்மை களைந்தே ஒழுக்கம் அணிவார்/

மெய்ம்மை யுரைக்கும் நாவின் அறமே/

போக்குமே வார்த்தைக் கறையை நம்மில்/

வள்ளுவன் கண்ட நல்லறத் தவத்தில்/

உள்ளத்தை இணைத்தே பெற்றிடலாம் தூய்மையே/

 இன்புறும் பண்பாடு
இன்முகம் காட்டியே இனித்திடும் அன்பில்/
இணையுமே இதயங்கள் நட்பின் புன்னகையில்/
இல்லத்தின் விருந்தோம்பலும் மகிழ்விக்கும் அறுசுவையில்/ 
இன்புறுமே பண்பாடும் உயரிய வாழ்வினில்/  

 
 மானுட சொந்தங்கள்
மாற்றுத் திறனாளிகள் மானுட சொந்தங்களே/
உரிமைதனை வழங்கி உயிர்ப்பிப்போம் வாழ்வுதனை/
வேற்றுமை காட்டாது நெருங்கிடுவோம் அன்பில்/
மறுவாழ்வும் வழங்கி ஏற்றிடுவோம் சமூகத்தினில்/
 கனவாகும் வாழ்க்கை 
கனவுகள் மெய்ப்பட உழைக்கும் வாழ்க்கையில்/
வதைக்குதே நோயும் கலையுதே ஆசைகள்/
வருந்தும் உடலை வேதனைகள் அரித்திட/
துடிக்குதே உணர்வுகளும் தவிக்குதே மனமும்/
நலன்களும் பறந்தோட மரணமும் அருகாக/
ஆரோக்கிய வாழ்வும் இங்கே கனவுதானோ/

  குடும்பம்
கூட்டுக் குடும்பமே/
குவலயத்தில் சிறக்கும்/
பிரிந்து வாழ்கையில்/
வலியதே மிஞ்சும்/
 
 அன்பு வாழ்வினில் 
ஆயுதம் ஏந்தா அன்பு வாழ்வினில்/
பாயுமே இன்பமும் பரவசம் மனதுக்கே/
ஓயுமே சண்டைகள் ஒழியுமே பாதகங்கள்/
சாயுமே வேற்றுமைகள் சக்திமிகுப் புரிந்துணர்வால்/
  
 கனவுகள் தளிர்க்கும்
உதிர்ந்தது அக்னிச் சிறகும் காலனிடம்/
உணர்வுகளின் கதறல்களைச் சேமித்தே பறந்ததே/
உலகிற்கே தேசத்தைப் பறைசாற்றிய நாயகன்/
விதைக்கப்பட்டாரே கண்ணீர்த்துளிகளால் வளர்ந்தாரே வரலாற்றிலும்/  
விரும்பியே ஏற்றிடுவார் இளையோரும் நன்மொழிகளை/
விட்டுச் சென்ற கனவுகளும் தளிர்க்கும்/                             

 கல்வி 
கல்வி கற்றவர்/
உலகில் சுற்றுவார்/
கல்லாதோர் சுருங்குவார்/
தனக்குள் வாழ்வார்/
 
 புது வாழ்க்கை
மறுமலர்ச்சி தந்திடுமே அறிவுப் புரட்சி/
மாற்றங்களையும் காட்டிடுமே பண்பாடும் மலர்ந்தே/
புதுமைகள் படைத்து வளர்ச்சி காணவே/
புத்துணர்ச்சியும் கிடைக்கும் புது வாழ்வினிலே/
 மழலை
புதுவரவு பூத்தது குடும்பத்தில் மழலையென/
புதுஉறவினில் நனைந்தோம் புன்னகையும் உதிர்த்தே/
புது மாற்றங்கள் தவழுமே குடும்பத்திலும்/
புத்துணர்ச்சியும் கொண்டதே உணர்வுகளும் மகிழ்ந்தே/ 

20. இனிக்கும் வாழ்வு
பூமகள் தவழ்ந்தாள் மடியினில் மழலையாகி/
புன்னகைத் தூறலால் வலியும் கரைத்தாள்/
பிஞ்சுக் கரத்தால் கொஞ்சியே நெஞ்சுக்குள்/
பிள்ளை யிவளும் அன்பூற்றுகின்றாள் அழகாய்/
இணைந்தாள் உறவாகி உணர்வும் இனித்திட/
இன்னொரு தாயாகி வாழ்வுக்குள் வந்தாள்/
 தவிப்பு-
தவம் இருந்தே பெற்ற மக்கள்/
தனித்தே விட்டாரே தள்ளாடும் வயதில்/
தவிக்கின்றேன் துணையின்றி தரணிக்கும் சுமையாகி/
தங்கும் நிழலிந்த வயோதிப மடம்தானே/

ஜன்ஸி கபூர் - 29.10.2020

















2020/10/01

அசதிக் கோவை

 

கற்பும் களவும்  இன்பத்தை உரச/

சொற் சுவையினில் களித்திடும் கலித்துறையும்/

கொற்றவனாம் வள்ளல் அசதியினைத் தாங்கியே/

நற்றமிழில் தந்ததே செவியும் இனித்திட/


அமுதம் பிசைந்து கவியூற்றிய ஓளவையின்/

அசதிக் கோவையை சுவைக்கையில் மனமினிக்குமே/

அற்புதக் கவி வார்ப்பின் நயத்தினில்/

அகமும் பருகுமே தமிழ்க்கவியின் புலமையை/


பொன்னுக்கும் புகழுக்கும் இசைகின்ற காலத்தில்/

எண்ணத்தில் சிறந்த வள்ளல் கோமானும்/

தன் கையால்  கூழினைக் கொடுத்தே/

நீக்கினானே ஓளவையின் அசதியையும் அன்பாலே/


அசதியை நீக்கியவனுக்காக அசதிக் கோவையை/

ஆக்கினாரே ஒளவையும் நற்றமிழில் கவியாற்றி/

இரண்டு பாடல்ச் சுவைகளின் இதத்தில்/

இதயமும் நனைகின்றதே பரவசமாய்ப் படர்ந்தே/


முற்றா முகில்மலையெனும் சிற்றிளம் பெண்/

பற்றினாள் உறவாய் பாச மகளுமானாள்/

கொற்றவன் மலைக்கும் சென்றாள் பொழுதொன்றில்/

சீற்றமோ வெம்மைக்கும் பாலைக்குள் அனலே/


கொட்டிய வெம்மையைத் தாங்குமோ கால்களும்

கொடுமைதானே வெயில் வலியும் அவளுக்கே/

முத்தமிழ் வித்தகர்  பிரிவின் வலிதனில்/

முடங்கிடுமோ உள்ளமும் அடங்காத் துயரில்/


கல்லாதோர் வனப்பிழப்பார் சூழ்ந்தோரும் துயருருவார்/

பொல்லாத உலகின் அடையாளமோ பணமும்/

அல்லலுக்குள் சுற்றுமே இளமை மனமும்/

எல்லாத் துன்பத்தின் திரட்சிக்குள் வீழ்வாளோ/


மகளும் என்றே கலக்கத்தில் தாயவளும்/

அசதி மன்னன் ஆளும் மலையின்/

அழகுக் காதலும் இசைகின்றதே வனப்பில்/


கயல்விழிப் பார்வைத்  துடிப்போடு இசைந்த/

காதலன் பார்வைக்குள் காண்பவை அவளே/

காடும் மலையும் பாறைகளும் மரங்களும்/

காதலால் கசிந்தே நினைவுக்குள் வார்க்கின்றதே/


காரிகை எழிலும் காதலன் துடிப்பும்/

கவித்துவத்தில் எழுகின்றதே வனப்பான காவியமாக/


ஜன்ஸி கபூர் - 1.10.2020


 




பூஞ்சோலை

 கவியுலகம் 

கவியுலகம் அணைக்கின்ற கவியுறவுகள் அகத்தினிலே/

களிப்பும் தழுவுகின்றதே கவிகளை வார்க்கையிலே/

சிந்தைக்குள் உணர்வூட்டி சிந்துகின்ற படைப்பினிலே/

வந்தமரும் கற்பனைகளின் மடியிந்தப் பூஞ்சோலை/

 மூன்று சொல் முத்து
 
மல்லிகை தவழும் கூந்தலும் மலரோ/
மொய்க்கின்றனவே வண்டுகள் மகரந்தம் சுவைக்கவே/
புன்னகை சிந்தும் மொட்டும் முத்தோ/
கன்னத்தில் பேரொளி மின்னலாய் பூக்கிறதே/
 
முல்லைச் சிரிப்பினை உதிர்த்திடும் அதரத்தில்/
மூன்றாம் பிறையும் முகத்திரை விலக்க/
தோன்றிடும் கற்பனைச் சுவைதனில் காரிகையும்/
வென்றிடுவாளே நிலாப் பெண் எழிலை/

ரோஜா பிழிந்தே செதுக்கும் சாற்றில்/
நனைகின்றதே தேகமும் சிலிர்ப்பை நுகர்ந்து/
மோகம் சூடும் மயக்கத்தில் மனதோ/
இரசிக்கின்றதே காதல் இம்சையைத் தனக்குள்/



 நடிகர் திலகம்
 
இமயத்தில் திரையுலகை ஏற்றிய செவாலியர்/
இதயத்தில் புன்னகைத்த நடிகர் திலகம்/
கலையையே ஆண்ட நடிப்பின் சக்கரவர்த்தி/
நிழலையும் உயிர்ப்பாக்கிய நவரச நாயகன்/

👄 மயிலானவளே மயங்காதே
 
மயிலானவளே மயங்காதே 
மனசுக்குள்ளே சிரிக்காதே//

சிரிக்கின்ற விழிகளில் 
ஒளிந்திருக்கிறதே நாணமும்//

நாணத்தின் அழகில் 
கன்னங்களும் சிவக்கிறதே//

சிவந்திடும் இதழ்கள் 
எழுதுகின்றதே கவிகள்//

கவிகளை ரசிக்கின்றேன் 
மனமோ உன்னிடமே//

உன்னிடமே எனைக் 
கொடுத்தேன் செல்லமே//

செல்லமே செதுக்குகின்றேன் 
இனிக்கின்றாய் எனக்குள்ளே//

எனக்குள்ளே வரைகின்றேன் 
ஓவியமே உயிர்க்கின்றாய்//

உயிர்க்கின்ற உனையே 
தழுவுகிறேன் சுகமாக//

சுகமான செங்கரும்பே 
எதிர்காலம் இனிக்குமடி//

இனிக்கின்ற நினைவுகள் 
இதயத்தின் மொழியே//

மொழியே தித்திக்கின்றாய் 
ரசிக்கின்றேன் நிதமும்//

 மறந்தால்தானே💗💗💗💗💗💗💗
 
மறந்தால்தானே பிரிவுக்குள் மூழ்கும் உறவும்/
உறவின் அணைப்பே சுகமாகும் வாழ்க்கையில்/

வாழ்விற்கும் அர்த்தமானதே உன்றன் துணையே/
துணையாகித் தொடர்கின்றாய் என்றன் நிழலிலும்/

நிழலும் நிஜமாகுமே பூக்கின்ற மெய்யன்பில்/ 
மெய்யன்பும் தழுவுகின்ற நினைவுகள் அழியாதே/

அழியாத ஓவியமாக உயிர்க்கின்றாய் உயிரினில்/
உயிரினில் படர்கின்றாய் தினமும் நீயே/


    வீரம் 
 
வீரம் பொங்கும் எங்கள் தமிழன்
கரமும் வெல்லும் சூழ்கின்ற போரை
சோரமும் போகாதே சுதந்திர வேட்கை
சரீரத்தையும் விதைக்கின்றோம் வெற்றிக்குள்  தமிழ்மண்ணே

 
 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
 
(அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் எண்: 23)
 
இல்லறத்தில் இசைந்தே தன்னலம் நீக்கி/
இனித்திடும் நல்லறத் தொண்டுதனைப் புரிந்தே/
இன்னுயிர் நீத்தோர் இவ்வுலகின் வழிகாட்டிகளாகி/
இறவா நற்பண்புகளால் பெருமையடைகின்றனர் என்றும்/