About Me

2020/10/01

பூஞ்சோலை

 கவியுலகம் 

கவியுலகம் அணைக்கின்ற கவியுறவுகள் அகத்தினிலே/

களிப்பும் தழுவுகின்றதே கவிகளை வார்க்கையிலே/

சிந்தைக்குள் உணர்வூட்டி சிந்துகின்ற படைப்பினிலே/

வந்தமரும் கற்பனைகளின் மடியிந்தப் பூஞ்சோலை/

 மூன்று சொல் முத்து
 
மல்லிகை தவழும் கூந்தலும் மலரோ/
மொய்க்கின்றனவே வண்டுகள் மகரந்தம் சுவைக்கவே/
புன்னகை சிந்தும் மொட்டும் முத்தோ/
கன்னத்தில் பேரொளி மின்னலாய் பூக்கிறதே/
 
முல்லைச் சிரிப்பினை உதிர்த்திடும் அதரத்தில்/
மூன்றாம் பிறையும் முகத்திரை விலக்க/
தோன்றிடும் கற்பனைச் சுவைதனில் காரிகையும்/
வென்றிடுவாளே நிலாப் பெண் எழிலை/

ரோஜா பிழிந்தே செதுக்கும் சாற்றில்/
நனைகின்றதே தேகமும் சிலிர்ப்பை நுகர்ந்து/
மோகம் சூடும் மயக்கத்தில் மனதோ/
இரசிக்கின்றதே காதல் இம்சையைத் தனக்குள்/



 நடிகர் திலகம்
 
இமயத்தில் திரையுலகை ஏற்றிய செவாலியர்/
இதயத்தில் புன்னகைத்த நடிகர் திலகம்/
கலையையே ஆண்ட நடிப்பின் சக்கரவர்த்தி/
நிழலையும் உயிர்ப்பாக்கிய நவரச நாயகன்/

👄 மயிலானவளே மயங்காதே
 
மயிலானவளே மயங்காதே 
மனசுக்குள்ளே சிரிக்காதே//

சிரிக்கின்ற விழிகளில் 
ஒளிந்திருக்கிறதே நாணமும்//

நாணத்தின் அழகில் 
கன்னங்களும் சிவக்கிறதே//

சிவந்திடும் இதழ்கள் 
எழுதுகின்றதே கவிகள்//

கவிகளை ரசிக்கின்றேன் 
மனமோ உன்னிடமே//

உன்னிடமே எனைக் 
கொடுத்தேன் செல்லமே//

செல்லமே செதுக்குகின்றேன் 
இனிக்கின்றாய் எனக்குள்ளே//

எனக்குள்ளே வரைகின்றேன் 
ஓவியமே உயிர்க்கின்றாய்//

உயிர்க்கின்ற உனையே 
தழுவுகிறேன் சுகமாக//

சுகமான செங்கரும்பே 
எதிர்காலம் இனிக்குமடி//

இனிக்கின்ற நினைவுகள் 
இதயத்தின் மொழியே//

மொழியே தித்திக்கின்றாய் 
ரசிக்கின்றேன் நிதமும்//

 மறந்தால்தானே💗💗💗💗💗💗💗
 
மறந்தால்தானே பிரிவுக்குள் மூழ்கும் உறவும்/
உறவின் அணைப்பே சுகமாகும் வாழ்க்கையில்/

வாழ்விற்கும் அர்த்தமானதே உன்றன் துணையே/
துணையாகித் தொடர்கின்றாய் என்றன் நிழலிலும்/

நிழலும் நிஜமாகுமே பூக்கின்ற மெய்யன்பில்/ 
மெய்யன்பும் தழுவுகின்ற நினைவுகள் அழியாதே/

அழியாத ஓவியமாக உயிர்க்கின்றாய் உயிரினில்/
உயிரினில் படர்கின்றாய் தினமும் நீயே/


    வீரம் 
 
வீரம் பொங்கும் எங்கள் தமிழன்
கரமும் வெல்லும் சூழ்கின்ற போரை
சோரமும் போகாதே சுதந்திர வேட்கை
சரீரத்தையும் விதைக்கின்றோம் வெற்றிக்குள்  தமிழ்மண்ணே

 
 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
 
(அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் எண்: 23)
 
இல்லறத்தில் இசைந்தே தன்னலம் நீக்கி/
இனித்திடும் நல்லறத் தொண்டுதனைப் புரிந்தே/
இன்னுயிர் நீத்தோர் இவ்வுலகின் வழிகாட்டிகளாகி/
இறவா நற்பண்புகளால் பெருமையடைகின்றனர் என்றும்/







 






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!