விடிகாலைப் பொழுதினில் விருப்பாகும் இதழ்கள்/
மடிகின்ற போதெல்லாம் இழக்கின்றதே இரசிப்பினை/
உதிரும் பூவே உணர்கின்றேன் உண்மையை/
அழகும் இளமையும் அழியும் வாழ்வினில்/
பழகும் அன்பே பண்பினிற் சிறந்ததென/
ஜன்ஸி கபூர் -3.12.2020
விடிகாலைப் பொழுதினில் விருப்பாகும் இதழ்கள்/
மடிகின்ற போதெல்லாம் இழக்கின்றதே இரசிப்பினை/
உதிரும் பூவே உணர்கின்றேன் உண்மையை/
அழகும் இளமையும் அழியும் வாழ்வினில்/
பழகும் அன்பே பண்பினிற் சிறந்ததென/
ஜன்ஸி கபூர் -3.12.2020
இருண்ட வானின் இறக்கைகளோ மழைமேகம்/
வருணன் வடிவெடுத்து வனப்பாக்குது மண்ணையும்/
துள்ளுகின்ற நீர்த்துளிகள் துயரினைப் போக்கிட/
உள்ளச் செழிப்பினால் உழைப்பும் உயருது/
உழவும் களித்திடும் பெருமழையால்/
கழனிப் பெருவெளியும் களிக்குதே பசுமைக்குள்/
ஜன்ஸி கபூர் - 3.12.2020
வாழ்க்கை என்பது தனிப் புள்ளியல்ல. உணர்வுகளால் சூழப்பட்ட கோலம். இந்த உணர்வுகளை ஆள்வோர் நமது உறவுகளே. நாம் நமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய இதயங்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை குறித்த பாதையில் நகர்த்தக் கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை எப்பொழுதும் அவதானித்துக் கட்டுப்படுத்தும் சக்தியாக இவ்வுறவுகள் இருப்பதனால் நாம் நமது எல்லைகளை விட்டு வெளியேறாது நம்மை நாமே கட்டுப்படுத்தி வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம் என்பதே உண்மை.
உறவுகளை நம்முடன் இணைப்பது அன்பு பாசம் சார்ந்த பிணைப்பே. உண்மை அன்பானது உபத்திரமாக மாறாது. நம்மைச் சூள்கின்ற ஆபத்துக்களைக் கூடத் தடுக்கின்ற சக்தி உண்மை உறவுகளுக்கு உண்டு
ஏழ்மையும் சிதைக்காத எழில்ப் பூவழகி/
வீழ்கின்றேனடி தினமும் விழிகளின் ஒளிர்வினில்/
கன்னத்தில் கரைந்திடும் வசீகரப் புன்னகையில்/
இன்பத்தைச் சுவைக்கின்றேன் இதயமும் சிறகடிக்க/
அன்பைக் குலைத்தே அமுதாய் ஊட்டுகையில்/
உன்னோடு வாழ்ந்திடவே மனம் விரும்புதே/
ஜன்ஸி கபூர் - 2.12.2020