About Me

2020/12/02

மனம் விரும்புதே

 


ஏழ்மையும் சிதைக்காத எழில்ப் பூவழகி/

வீழ்கின்றேனடி தினமும் விழிகளின் ஒளிர்வினில்/

கன்னத்தில் கரைந்திடும் வசீகரப் புன்னகையில்/

இன்பத்தைச் சுவைக்கின்றேன் இதயமும் சிறகடிக்க/

அன்பைக் குலைத்தே அமுதாய் ஊட்டுகையில்/

உன்னோடு வாழ்ந்திடவே மனம் விரும்புதே/


ஜன்ஸி கபூர் - 2.12.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!