குறள் - 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கு இயன்றது அறம்.
பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல்
பொருத்திடுமே குற்றத்தில் வருத்திடுமே பாவத்தில்
திருந்திடலாம் அறத்துள் வாழ்வினைப் பிணைத்தே
சிறந்திடலாம் மனிதத்துள் நமையும் இருத்தி
குறள் - 39
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
அறத்தோடு இசைந்து வாழ்வதே பேரின்பம்
அன்றில் பறந்தோடுமே உள்ளத்தின் இன்பம்
உளக் குற்றத்தால் மறைகின்ற புகழும்
உணர்வினைச் சிதைத்து துன்பத்தில் வீழ்த்துமே