About Me

2021/04/22

அறன் வலியுறுத்தல்

 குறள் - 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கு இயன்றது அறம்.

பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல்

பொருத்திடுமே குற்றத்தில் வருத்திடுமே பாவத்தில் 

திருந்திடலாம் அறத்துள் வாழ்வினைப் பிணைத்தே 

சிறந்திடலாம் மனிதத்துள் நமையும் இருத்தி 


 குறள் - 39

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

அறத்தோடு இசைந்து வாழ்வதே பேரின்பம் 

அன்றில் பறந்தோடுமே உள்ளத்தின் இன்பம் 

உளக் குற்றத்தால் மறைகின்ற புகழும் 

உணர்வினைச் சிதைத்து துன்பத்தில் வீழ்த்துமே 

 

அறன் வலியுறுத்தல்
-------------------------------------
மனதின் நேர்மை அறத்தின் மகுடம்/
தனக்கெனச் செய்கையில் இன்பமும் தளிர்க்கும்/

குற்றம் குறைகளைக் களைந்திடும் பண்பே/
சுற்றம் எங்குமே சிறப்பினை வார்க்கும்/

புகழும் வந்திடும் அகத்தின் தூய்மையால்/
இகழ்ந்திடுவார் அறம் மறந்து வாழ்வோரை/

வாழ்நாள் பலனை உணர்ந்திடும் தருணம்/
வாழ்த்துமே புவியும் நற்பண்பினை மதித்தே/
 
ஜன்ஸி கபூர்  

 

மன வலிமை

 
மண்ணில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்துமே/
தன்னைத் தாழ்த்துவதில்லை அற்புத வாழ்வினிலே/

தளர்ந்திடாத தன்னம்பிக்கையை மனதில் ஏந்தி/  
தலைநிமிர்கின்றேன் நானும் உக்கிரம் கொண்டே/ 

கண்ணாடியின் விம்பத்தில் பூனைத் தோற்றமே/
எண்ணத்தின் வடிவமாய் வலிமைச் சிதறல்களே/

அறிந்திடுவாரோ அகமேந்தும் முரணின் நாட்டத்தை/
புரிந்திடுவாரோ பதுமை ஏந்தும் தீப்பிழம்பை/

உருவம் பார்த்து எடை போடுவோரே/
உணர்ந்திடுவீர் வேற்றுமை கொண்ட மனதினை/

ஜன்ஸி கபூர்  
 

கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?

  

 
ரும்பின் சுவையில் இனித்திடுவார் நல்லோர்
பெருமனதோடு நற்காரியங்களையும் ஆற்றுவார் சிறப்பாக
அன்பினைப் பிழிந்தும் ஊற்றுவார் அமிர்தமாக
இனிப்பான இன்பத்தினைச் சுவைத்திடச் செய்வார்
கனிவான மாந்தர் தருகின்ற நட்புக்கும்
விலையும் உண்டோ இவ்வையக வாழ்வினில் 

குறள் கவிதைகள்


(குறள்  - 65) 
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
 
இல்வாழ்வும் தந்திடும்    குழந்தைச் செல்வமே/
இனித்திடும் இன்பமாம்   இவ்வுலக வாழ்வில்/

குழந்தையின் தழுவலில்  துளிர்க்குமே மகிழ்வும்/
மழலையின் மொழியினைச்  சுவைத்திடுமே செவியும்/4

உளத்தையும் உடலையும்  அணைக்கின்ற மக்களால்/
உணர்கின்ற இன்பமே துன்பத்திற்கான மருந்தே/

சேயின் மெய்தீண்டலில் வழிந்தோடும் வலியும்/
சேர்த்திடுவர் களிப்பினை  மக்கள் செல்வத்தினர்/ 8
                                                                                              
   (குறள்  - 68) 
 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
 
பிறப்பின் பயனாம்  பெற்றோருக்கும் நன்மக்களாவது/
சிறப்பான உயர்வும்  தந்திடுமே இன்பமே/

அறிவின் உயர்ச்சிக்குள்  உயிர்த்திடும் பிள்ளையால்/
ஆனந்தமே துளிர்க்கும்  பெற்றவர்கள் நெஞ்சுக்குள்/4

 தன் பிள்ளையின்  உயர்வின் மலர்ச்சியில்/
துன்பம் கரைத்து  மனமும் களிப்பிலாடும்/  

அறம்தானே அகிலத்தின்  உயிர்களுக்கும் இன்பமளித்தல்/
அகமகிழ்ச்சிக்குள் அனைவரையும்  இசைத்திடுமே அறிவுடைமை/ 8

ஜன்ஸி கபூர்  

  குறள் 971:

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

 

குறள் 972:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

 

#ஒளிஒருவற்கு_உள்ள_வெறுக்கை_இளிஒருவற்கு

#அஃதிறந்து_வாழ்தும்_எனல்.

ஊக்கத்தின் உயர்வினில் பெருமை


பிறர் செய்திடாத நற்செயல்களை நானும்/

செய்திடுவேனெனும் ஊக்கம் கொண்டோரே தம்முள்/

பெற்றிடுவார் பெருமையெனும் நற்பண்பினைச் சிறப்பாக/

அன்றேல் அவ்வூக்கமின்றி வாழ்தலே போதுமென்று/

சிந்தைக்குள் கருத்தினைப் பெற்றே இழிந்திடுவோர்/

இணைத்திடுவார் உளத்தில் உளக்குமுறலெனும் மாசினை/