About Me

2021/04/22

அறன் வலியுறுத்தல்

 குறள் - 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கு இயன்றது அறம்.

பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல்

பொருத்திடுமே குற்றத்தில் வருத்திடுமே பாவத்தில் 

திருந்திடலாம் அறத்துள் வாழ்வினைப் பிணைத்தே 

சிறந்திடலாம் மனிதத்துள் நமையும் இருத்தி 


 குறள் - 39

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

அறத்தோடு இசைந்து வாழ்வதே பேரின்பம் 

அன்றில் பறந்தோடுமே உள்ளத்தின் இன்பம் 

உளக் குற்றத்தால் மறைகின்ற புகழும் 

உணர்வினைச் சிதைத்து துன்பத்தில் வீழ்த்துமே 

 

அறன் வலியுறுத்தல்
-------------------------------------
மனதின் நேர்மை அறத்தின் மகுடம்/
தனக்கெனச் செய்கையில் இன்பமும் தளிர்க்கும்/

குற்றம் குறைகளைக் களைந்திடும் பண்பே/
சுற்றம் எங்குமே சிறப்பினை வார்க்கும்/

புகழும் வந்திடும் அகத்தின் தூய்மையால்/
இகழ்ந்திடுவார் அறம் மறந்து வாழ்வோரை/

வாழ்நாள் பலனை உணர்ந்திடும் தருணம்/
வாழ்த்துமே புவியும் நற்பண்பினை மதித்தே/
 
ஜன்ஸி கபூர்  

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!